புதன், 1 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை ->1 - 3 விளக்கம்...

 அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
ஐயா பட்டினத்து அடிகள் பல தலையாத்திரைகள் மேற்கொண்டு அதன் மூலம் கண்ட அனுபவம் மற்றும் உடன் இருந்தோர்களின் அனுபவம் இதனைக் கொண்டு தம் உடலையே சோதனைச்சாலையாக மாற்றினார்.

அந்த சோதனையின் விளைவு தான் இந்த பூரணமாலையாகும் .
இவ்வுலகில் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற எல்லா மகான்கள் மற்றும் யோகிகள் கூறும் அனுபவங்கள் எல்லாம் ஒன்றாகவே  தான் இருக்கின்றது .


நமது உடலை பஞ்ச பூதங்களாக பிரித்து அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை அழகாக பாடலில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.  

சித்தர்கள் என்றும் புறவழிப்பாட்டினை விரும்பாதவர்கள்
இருப்பினும் மக்களின் வாழ்க்கைக்கு ஏற்ப தமது பகுத்தறிவினை கொண்டு பலவித தெய்வங்களை உருவாக்கினார்கள் என்று நாம் இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம் .

முழுமுதல் கடவுள் -விநாயகர், கணபதி
படைக்கும் கடவுள் - பிரம்மா
காக்கும் கடவுள் - திருமால்
கர்மாக்களை அழிக்கும் கடவுள் - உருத்திரன்  .
வசியபடுத்துதல்(சுவாசம்) - மகேசுவரன்
ஐம்பொறிகளை கட்டுபடுத்துதல் -சதாசிவம்

முதலில் உள்ள பாடலில் மூலதாரத்தில் உறங்கிக்கொண்டு இருக்கும் குண்டலினி சக்தியை உணராமல் மதி மறந்தேன் என கூறுகிறார் . இது முக்கோண சக்கரத்தில் அமைந்து இருக்கும் எனவும் கூறுகிறார்.  இது மிகவும் முக்கியமான சக்கரம் ஆகும்.

மூலம் + ஆதாரம் = மூலாதாரம் . நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு ஆதராமே இது தான். இது பாம்பு மாதிரி தலைகீழாக உறங்கி கொண்டு இருக்கும் . இதில் உள்ள மூச்சுகளை கொண்டு தான் நாம் உயிர் வாழ முடியும். 
நம்மிடம் உள்ள எல்லா மூச்சுகளும்  முடிந்துவிட்டால் நமது பிராணன் நம்மை விட்டு விலகி மரணம் என்ற ஒரு நிகழ்வு ஏற்படும். இது பிறக்கும்போதே நமக்கு நிச்சியக்கபட்டு விடும். 

இங்கு நான்கு இதழ் கொண்ட வடிவத்தை காணலாம். 
இதன் அதிபதி கணபதி . இதன் உயிர் மந்திரம் 'லம்' .
இது பஞ்ச பூதங்களில் மண் அல்லது பூமி . இது அமைந்துள்ள இடம் ஆசனவாய்க்கு அருகில் உள்ளது .


இரண்டாவது பாடலில் சுவாதிட்டானம் சக்கரத்தைப்பற்றி பாடுகிறார்.
இது படைக்கும் தொழிலை செய்கிறது ஆகையால் தான் இதன் அதிபதி பிருமா என்று வைத்தார்கள் . இது ஆறு இதழ்கள் கொண்டது .இதன் மந்திரம் 'வம்'. இதன் சக்கரத்தில் அதிக நேரம் தியானம் செய்ய கூடாது என கூறுவார்கள் . இது காமத்தை அதிகம் தூண்டி இனவிருத்தியை செய்யும் சக்கரம் ஆகும்.  இது இனப்பெருக்க உறுப்புகள் அமைந்துள்ள இடத்திருக்கு அருகில் அமைந்துள்ளது .  இதன் சக்கரம் முறையாக செய்யல படவில்லைஎன்றால் மலடு, குழந்தை இன்மை போன்றவை ஏற்படும்.

"உந்திகமலத்து உதித்து நின்ற பிருமாவைச்"--இங்கு கூறப்படும் கமலம் ஆறு இதழ்கள் கொண்டது . இதனைக் காணாமல் அழிந்தேன் என கூறுகிறார். இதன் பஞ்சபூத  தலம் 'நீர்' ஆகும். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் உயிரனங்கள் முதலில் தோன்றியது நீர் நிலையில் தான் என்ற அறிவியல் நுட்பம் நமக்கு புரிகிறது.

மூன்றாவது பாடலில் உள்ள "நாபிக் கமல நடுநெடுமால் காணாமல்'--என்று  கூறப்படும் சக்கரம் மனிபூரகமாகும் . இதன் அதிபதி திருமால் . இது பத்து இதழ்கள் கொண்டது. இதன் உயிர்  மந்திரம் 'ரம்'.  இது அமைந்துள்ள இடம் தொப்புள் கொடி. இந்த சக்கரத்தில் நீண்ட நேரம் தியானம்  செய்தால் நமது ஸ்தூல சரிரம் நம்மை விட்டு விலகும்.  ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுதல் , கூடுவிட்டு கூடு பாய்தல் போன்ற சித்துகள் கிடைக்கும் இடம்.  இதன் பஞ்சபூத  தலம் 'நெருப்பு' ஆகும். ஆகையால் தான் நமது வயற்றை அக்கினி குண்டம் என்று கூறுவார்கள் .
நாம் உண்ட உணவினை நன்கு செரித்து நமது உடலுக்கு தேவையான அனைத்துவித சத்துகளும் நமக்கு இங்கு இருந்து தான் கிடைக்கிறது .ஆகையால் தான் இது காக்கும் கடவுள் என்ற ஸ்தானத்தை பெறுகிறது . அதருக்குண்டான கடவுள் திருமால் என்று வைக்கப்பட்டுள்ளது.

"ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன்"- இத்தகைய சிறப்புகளை அறியாமல் இந்த உடலை கொண்டு நான் அறிவழிந்தேன் என்று புலம்புகிறார்.


தொடரும் .....
என்றும்-சிவனடிமை-பாலா.

2 கருத்துகள்:

  1. சக்கரங்கள் பற்றி விளக்கங்கள் அருமை... தொடரட்டும் உங்கள் பணி.

    வாழ்த்துக்கள்.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. மிகவும் பயனுள்ள விளக்கங்கள். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு