வெள்ளி, 21 ஜனவரி, 2011

சித்தர்கள் என்பவர் யார்?


எனது நண்பன் ஒரு கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவனாக இருந்தபோதும் ,அவனின் சித்தர் தேடலில் கிடைத்தவைத்தான் இந்த அறிய வகை முத்துகள்.
சித்தர்களின் வாழ்க்கை முறையை அனைத்துதரப்பு மக்களுக்கும் கொண்டு செல்வதே எனது நோக்கம் என்று கூறி இக்கட்டுரையை நான் சமர்ப்பிக்கிறேன். 
இக்கட்டுரையை தொகுத்த சித்தர்மக்கள் பின்வருமாறு...  
தமிழ்ச்சித்தர் வம்சம்

கட்டுரையாளர்: திரு. பரந்தாமன்,விருது நகர்தமிழகம் (ஸ்ரீசித்தர் யோக மையம்),கட்டுரையைத் தட்டச்சு செய்து வழங்கியவர்: திருமதி.கீதா சாம்பசிவம்

நான் இதை பதிவு மட்டுமே செய்கிறேன் , மதிப்பிற்குரிய ஐயா பரந்தாமன் மற்றும் அன்னை கீதா சாம்பசிவம் இதனைப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

வியாழன், 20 ஜனவரி, 2011

ஞான பிதாவின் பார்வையில்..

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
  அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
  பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ

முன்னை எத்தனை எத்தனை சென்மமோ
   மூடனாய் அடியேனும்  அறிந்திலேன்
இன்னம்  எத்தனை எத்தனை சென்மமோ
   என்செய் வேன்கச்சி ஏகம்ப நாதனே....

செவ்வாய், 18 ஜனவரி, 2011

சித்தர்,முத்தர், ஞானியர்..கோரக்க சித்தர்..

ஐயா பா. கமலகண்ணன் அவர்கள் எழுதிய ஞானக்கனலிருந்து .....
.
சித்தர்,முத்தர், ஞானியர் என்ற சொல்லுக்கு கோரக்க சித்தர் கூறும் பதில்...

பேராம் பிரமானந்த மடைந்தோனே சித்தன்
    பிரம மூப்பைக் கண்டவனே தவசிரேஷ்டன்
கூரான வாசி மறித்தவனே சித்தன்
   குறிக்கண்டு மாயை வென்றவனே முத்தன்

பூராயம் தெரிந்தவனே கிரியை பெற்றோன்
   பூவுலகில் வசித்தவனே சரியை மார்க்கன்
நேரான தீட்சை பெற்றோன் சீவ முத்தன்
நிறை சிவயோகம் புரிந்தோன் ஞானியாமே...

புதன், 12 ஜனவரி, 2011

கடவுளைக் காணமுடியுமா..?

கடவுளைக் காணமுடியுமா..? என்ற கேள்விக்கு சித்தர்கள் தரும் விளக்கம்.
உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீ இருந்தது
எள்ளளவும் நான் அறியாதே இருந்தேனே பூரணமே! --பட்டினத்தார்.

என்னைவிட்டு நீங்காமல் என்னிடத்து  நீ இருக்க
உன்னைவிட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம் ?----பத்திரகிரியார்.

என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ?--சிவவாக்கியர்.

இந்த பாடல்களின் மூலம் கடவுளைக் காணமுடியும் என்று உறுதியாக நம்புவோம்.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

சித்தர் நூல்கள் யாருக்கு கிடைக்கும்..(2)

அகத்தியர் அருளிய பரிபாஷைத்திரட்டு நூலில் இருந்து ....

அருளினதோர் ஐநூறும் யாருக்கென்றால்
    அகங்கடந்த மெய்ஞானியருள்  பெற்றோர்க்குக்
குரு முகமாய்க் கொடுப்பதெல்லாம் மற்றோர் கையில்
    கொடுத்தவர்க்கும் பெற்றவர்க்கும் சாபம் எனக்கூறிப்
பெருமையுள்ள சித்தர்தமை வணங்கிப் போற்றிப்
    பிரமன் தன் உத்தரவு தன்னால் இந்நூல்
கருவறிய ஞானி கட்கே வெளியிட்டேனால்
   கையடக்கமாக வைத்துக்கொண்டு தேறே !

சித்தர் நூல்கள் யாருக்கு கிடைக்கும்....

அகத்தியர் அருளிய பரிபாஷைத்திரட்டு நூலில் இருந்து ....

கெதியறியாப் பாவிகட்கு  இந்நூல் கிட்டாது
கிருபையுள்ள  ஞானிகட்கே எய்தும் எய்தும்
பதியறிய நன்மௌன யோகி கட்கே
பரிசுத்த நூலிது தான் பதனம் பண்ணும்
விதி இல்லை என்றெண்ணாதே நூலைத்தேடு
விண்டு  மிண்டு பேசாதே வேண்டாம் வேண்டாம்
நிதி பெறுவார் உபசாரம் நீக்கிப் போடு
நினைவு கொண்டு சூத்திரத்தின் நிலையைப்பாரே!

ஞானமார்க்கம் நாட்டமுள்ளவர்கள் மட்டும் குரு முகமாய் அறிந்து கொள்வதற்காக  பெரியோர்கள் பாடி வைத்தனர் என்றும் எல்லாருக்கும் பொதுவாக அவர்கள் தம்முடைய நூல்களை இயற்றவில்லை என்று புலப்படுகிறது.

திங்கள், 10 ஜனவரி, 2011

வாசியைப்பற்றி நான் கொள்ள இருக்கும் ஆய்வு..

வாசியைப்பற்றி நான் கொள்ள இருக்கும் ஆய்வுக்கு பதினெண் சித்தர்களும் துணை என்று என் வாழ்கையை அவர்களின் கமலபாதங்களுக்கு சமர்பிக்கிறேன்.
ஆய்வுக்கு கொள்ள இருக்கும் நூல்களில் குருப்பிடதக்கவை . காகபுசன்டரின் பெருநூல் காவியம் மற்றும் அகத்தியரின் நூல்களில் சில. 
என்னும் ஓரிரு தினங்களில் இந்த சேவையை நான் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் . குருவருளினால் இது அனைவருக்கும் போய் சேரும் .

என்றும் சிவனடிமை(குருவருளால்)- பாலா -சென்னை .

புதன், 5 ஜனவரி, 2011

யோகம்(வாசி) செய்ய வேண்டிய நேரம்..

காகபுசன்டரின் பாடலில் யோகம்(வாசி) செய்ய வேண்டிய நேரத்தைப்பற்றி ....

அக்கினியே  மூலதழல்  நெருப்பைக்கண்டு
அசைவாசி மேலெழும்ப யோகநித்திரை
மக்கினியே வயர்நிறைய அன்னமுண்டு
மந்ததத்தால்  மூலஅனல் அபனாமாச்சு
தக்கினியே யபாணவாய் வாடாமற்றான்
தாதுநஷ்டி  பிலப்படுவும் உச்சிநோக்கு
சொக்கினிய ராக்காலம் மல்லாந்தேதான்
துடர்வாசி பார்த்திடவும் நடுவேபாரே .

செவ்வாய், 4 ஜனவரி, 2011

காகபுசண்டரின் பெருநூல் காவியம் 1000 -ல் யோகியின் நிலை

யோகிதான் ஞானபதம் பெற்றுமேலே
உறவினர்போலே இருப்பார் விருந்துண்பார்போல்
யோகிதான் வருங்கால மெடுத்துரைப்பார் 
ஊணுறக்க மின்பதுன்ப மொத்திருப்பார்
யோகிதான் ஞானபதம் மேலேயோகம்
உற்றமனம் பட்டதனால் யோகவானாம்
யோகிதான் யோகவான் சித்தஞானி
உறமான ரிஷியிவனும் முனியாவானே

வியாழன், 16 டிசம்பர், 2010

அகத்தியர் காலம்

அகத்தியரின்   காலத்தைப்பற்றி கருவூரர்  பின்வருமாறு பாடுகிறார்.....

பாராப்பா கிரேதாயில் ரொம்ப ஆட்டம்
      பண்பாக ஆடினார் சித்தரெல்லாம்
வேரப்பா திரேதாயில்  அட்ட சித்தும்
     வேடிக்கை  வினோதங்கள்  செய்து வந்தார்
சீரப்பா துவாபரயி  லநேக  சித்தி
    செய்தவர்கள்  நல்லதொரு பேரு பெற்றார்
காரப்பா கலி யுகந்தான்  போகு மட்டுங்
    கண்மூடி  வாசி யோகங் கண்டார் பாரே ......