வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

நீங்களும் தேவராகலாம்.....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,


நீண்ட இடைவெளிக்குப்பிறகு  உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

பால் கறத்தல் பற்றி எழுத ஆரம்பித்த பிறகு தான் பல மாற்றங்கள் என்னுள் ஏற்படுகிறது . இதை எழுதலாமா வேணாமா என்ற எண்ணத்திலே பல நாட்கள் போய்விட்டது . ஆனால் இதை குருமுகமாக தான் கேட்டு பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.  ஆகையால் இதனை விளக்கமாக எழுதும் காலம் கூட கூடிய விரைவில் வரலாம்.


இங்கு பால் என்று குறிப்பிடப்படுவது அமிர்தம் ஆகும் .


தேவர்களுக்கு சாவே கிடையாது(அமிர்தம் உண்டதால் ). ஆக தேவர்கள் மனிதர்களை விட உயர்ந்தவர்களா ?. இல்லை ,இருக்கவே முடியாது .
 நமது சித்தர்கள் இன்றும் உயிரோடு தான் இருந்து கொண்டு 
நம்மிடையே உலவி கொண்டு நம்மை காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சுருக்கமாக சொல்லபோனால் , நம்மிடம் உள்ள சுக்கிலத்தை முறையான யோக பயிற்சியின் மூலம்  சுத்தம் செய்து அதில் உள்ள உயிர் சக்தியை நம்முடைய கபாலத்தில் சேகரித்து வைத்து கொள்ளவேண்டும். அவ்வாறு சேகரித்து வைத்துள்ள திரவத்தில்(உயிர் சக்தி ) இருந்து ,மற்றொரு யோக மூச்சு(வாசி) பயிற்சியின் மூலம் நம்முடைய அண்ணாக்கில் விழ செய்ய வேண்டும் .
இவ்வாறு செய்தால் நம்முடைய உயிரின் சக்தியை நம்மால் நீட்டிக்க முடியும்.


எந்த அளவுக்கு உயிர் சக்தி உள்ளதோ அந்த அளவுக்கு அவர்களால் இவ்வுலகில்
உயிர் வாழ முடியும்.  இந்த அமிர்தத்தை கொண்டு எல்லாவித வியாதிகளையும் அவர்கள் உடம்பில் இருந்து வெளியேற்றி கொள்ள முடியும். ஏன் இந்த உடலையே அவர்களால் பிரபஞ்சத்தில் கலந்து கொள்ள செய்து கொள்ள முடியும்.

குருவின் பாத கமலங்களை பற்றி கொண்டு அந்த வித்தையை கற்றுக்கொள்ளுங்கள். நீங்களும் தேவராகலாம் .

 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.