திங்கள், 28 பிப்ரவரி, 2011

பத்திரகிரியார் மெய்ஞானப்புலம்பலில்...


பத்திரகிரியார் மெய்ஞானப்புலம்பலில்...சமாதியைப்பற்றி

சும்மா கண்ணை மூடிக்கொண்டு இருத்தல் அல்லது திறந்து கொண்டு இருத்தல் இதுவெல்லாம் சமாதி ஆகாது.

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து
தூங்காமற் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்துநிதஞ்
செத்த சவம்போற் றிவதனி எககாலம் ?

 சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன்னடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவது மெக்காலம்?



என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

சனி, 26 பிப்ரவரி, 2011

பொய் தவசிப்பற்றி காகபுசண்டர் கூறும் கருத்துகள் ,


சித்தர்கள் பொதுவாக பொய் வேடமிட்டு திரியும் மாக்களை நன்றாக வசை 
பாடுவார்கள் .இந்த உலகில் உயிர் வாழ வேண்டும் அதற்க்கு அன்னம் வேண்டும்.அன்னத்திற்கு வேண்டி ஒருவன் தவசியானால் அவன் நிலையைப்பற்றி.

எனக்கு பிடித்த பாடலில் ஒன்று..

பாடல்:

சோருக்கோ அருசுவைக்கோ துணிக்கித் தானோ 
   சுகம்வேண்டி யிவ்வளவுங் கையையேந்தி
நீருக்கோ ஓடேந்தி  வாசல்நின்று 
   நிமிர்ந்தாக்கால் நீரிடார் தலைகவிழ்ந்தே 

பாருக்கோ பாதமதைப்  பார்த்தேநின்று 
   பரிவாசி காணாமற் கூசிநின்று
மோருக்கோ நின்றிரு ப்பீர்  வாசல்தோறும் 
  மொய்குழலா ரிட்டஅன்னம்  வீடுதானே ....

விளக்கம் :
பொதுவாக பிச்சை எடுப்பது சாதாரண விஷயம் இல்லை . பலரின் ஏச்சுகலுக்கு இடையில் தான் வாழ முடியும். இப்படி  பட்ட வாழ்க்கை நமக்கு தேவையா ?
தேவை என்றால் அதை அனுபவித்து வாழ வேண்டும். 
எல்லா சித்தர்களும் திருமணம் புரிந்து கொண்டு இல்லறத்தில் இருந்து கொண்டு துறவறத்தை மேற்கொண்டவர்கள் . எமது குரு முனியும் கூட தான்.
யாரும் இதற்க்கு விதி விளக்கல்ல .

பிச்சை எடுத்தவர்களில் பல சித்தர்களுண்டு ஏன் அந்த ஆதி சித்தனும் உண்டு.

அன்னமய கோசத்திற்கு தான் அன்னம் தேவை ஆனந்தமய கோசத்திற்கு இல்லை .  மேற்கண்ட பாடல் அருமையான விளக்கத்தோடு உள்ளது 
பிச்சை எடுப்பதும் அதில் கிடைத்தால் சந்தோசம் இல்லையென்றால் தலை கவிழ்ந்து அசிங்கம் ஏற்படும் போன்ற கருத்துகள் உள்ளது.

வாசியைப்பார்த்து வந்தால் அன்னம் தேவை இல்லை ,ஆனந்தம் அங்கு தாண்டவமாடும் . உயிருக்கும் உடலுக்கும் தேவையான அனைத்து சத்துகளும் வாசியின் மூலம் பெறமுடியும்.

"வாசியை கவனித்தால் காசி போக தேவையில்லை"

வாசியை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் குருவருளால்.


என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

சிவவாக்கியரின் பாடலில் மந்திரத்தைப்பற்றி..

மந்திரங்களின் மூலம் என்ன பெறமுடியும் ?

பாடல் :
மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ
மந்திரங்கள் உம்முளே மதித்தநீரும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்தெலுத்துமே

விளக்கம்:
உலகில் மனிதகுலம் தோன்றியபோது எந்த வித மந்திரங்களும் கிடையாது. பிறகு பல ரிஷிகள் மற்றும் முனிவர்களால் உருவாக்கப்பட்டது தான் மந்திரங்கள்.  மனதின் திறத்தை கொண்டு எழுத்துகளை ஒன்றுசேர்த்து கூறும்போது ஒருவித சக்தி நமக்கு கிடைக்கிறது. ஆயினும் இதனால் நமக்கு நன்மை உண்டு என்றாலும் பிறவா பேரின்ப நிலைக்கு மந்திரங்கள் உதவாது என்பது எனது கருத்து.

கற்ற மந்திரத்தால் இறந்த உடலுக்கு உயிர் கொடுக்க முடியமா? முடியாது
இறந்தப்பின் நாம் படித்த  மந்திரத்தால் நமக்கு என்னப்பயன் கிடைக்கும் ? அல்லது நம்மால் அதைதான் பிரயோகிக்க முடியுமா ? முடியாது அல்லவா.

உண்மையான மந்திரம் என்பது ஐந்தெழுத்து அந்த ஐந்தெழுத்தையும் மெய்உணர்ந்தப்பின் எந்த மந்திரம் நமக்கு தேவைப்படாது ...

"  நமசிவய என்ற மந்திரம் தான் அது"--இந்த ஐந்தெழுத்தைதையும் யார் நன்றாக உணர்ந்து  பயன் படுத்துகிறார்களோ அவர்களே பிறவா யாக்கையை பெறமுடியும்.

இவை வெறும் வார்த்தைகள் கிடையாது பஞ்சபூத தத்துவத்தைகொண்டது.

"முடிந்தால் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ."

"அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்திலும் உள்ளது"

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

சங்கிலி சித்தரின் பாடலில்...

சங்கிலி சித்தரின் பாடலில் யாம் கண்ட பாடல் இதோ.

"மணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண்னோடுபின்  
மக்களைப் பெற்று வளர்த்து எடுத்துப்
பிணக்கோலம் ஆவது அறியாமல் வீணே
பிதற்றுவது ஏதுக்கு ஆனந்த்ப் பெண்ணே!


என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

அழுகணிச் சித்தரின் பாடலில் வாசியைபற்றி...

 வாசியைபற்றி :

எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்ட கையிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திருக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா
ஆண்டி ருந்தாலாகாதோ ......

 விளக்கம் :
பொதுவாக நாம் சுவாசிக்கும் மூச்சானது உள்ளே செல்லும்போது 16  அங்குலமாக செல்கிறது. அது வெளியே வரும்போது 12  அங்குலமாக தான் வருகிறது.  ஆகையால் நம் உடலில் தங்குவது 4  அங்குலம் உள்ள சுவாசம் தான். இவ்வாறு விரயமாகும் மூச்சினை முறையாக செலவழித்தால் நீண்ட ஆயுட்காலம் வாழ முடியும் என்பது தான் இப்பாடலின் கருத்து.


புரவி   : சுவாசம்
யீராறு:  2 * 6  = 12 
கட்ட கையிறெடுத்துக்: சரம் பார்த்தல் (வாசி பயிற்சி)
"சரத்தை பார்ப்பவன் பரத்தை பார்பான்"

கால்நாலுஞ்:(4 +4+4 +4 = 16  )
அட்டாள தேசமெல்லாம்: (அட்டமா சித்திகள்(8 ) )

உள்ளே செல்லும் மூச்சினை வெளியே விடாமல் உள்ளே சுவாசிக்கும் முறைக்கு தான் வாசி என்று பெயர். 
இந்த பயிற்சியின் மூலம் சுவாசம் வெளிவருவதில்லை .ஆகையால் சித்தர்கள் நீண்ட ஆயுட்காலம்(இன்றும்) உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். (வாசி = சிவா ). இந்த பயிற்சின் மூலம் அவர்கள் அட்டமா சித்திகள் என்னும் அபூர்வ வகையான சக்திகள் கொண்டு உலகமெங்கும் வாழும் மக்களுக்காக தொண்டு புரிந்து வருகிறார்கள்.

"சித்தர்கள் மக்களுக்காக என்றும் வாழும் மகத்தானவர்கள்."

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

வால்மீகரின் பார்வையில் "போலி சாமியார்கள்"

பாடல்:
சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்
  தூடிப்பா ருலகத்தில் சிற்சில் லோர்கள்
தெற்றுவா ராவர் பிழைக்க அநேக வேடம்
  தேகத்தில் அணிந்து கொண்டு திரிகுவார்கள்
பற்றுவார் குருக்கள்  என்பார்  சீடரென்பார்
  பையவே தீட்ச்சை வைப்பார் தீமை என்பார்
கத்துவார் திருமூர்த்தி தாமே யென்று
  காரணத்தை யறியாத கசடர் தானே .

தானென்றே உலகத்தில் சிற்சில் லோர்கள்
  சடைபுலித்தோல் காசாயம் தாவடம்பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
  உலகத்தில்  யோகியென்பார் ஞானியென்பார்
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்
  திருமாலைக் கண்ணாலே கொண்டோ மென்பார்
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
  காரணத்தை யறியாமல் கதறுவாறே.

விளக்கம்:
மேற்கண்ட பாடலில் யாம் அறிந்த கருத்து.
பலவித  நூல்களை படித்துவிட்டு ,பல இடங்களுக்கு சென்று விட்டு திரியும் வகையினர் உண்டு . அவரவர் பிழைக்க தம் உடலெங்கும் பலவித வர்ணங்களை மதத்தின் பெயரால்  பூசிக்கொண்டு திரிவார்கள்  .தம்மை தானே குருவென்றும் , மற்றவர்களை சீடர்கள் என்றும் கூறி அவர்களுக்கு தீட்சை அளிப்பார்கள்.  தம்மையே திருமூர்த்தி என்று சொல்லி அலங்கரித்து கொள்வார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களின் மதிப்பையும் , பண செல்வாக்கையும் உயர்த்திகொள்வார்கள்.  இவர்களின் நோக்கம் , மற்றவர்களிடம் இருந்து தம்மை வேறுப்படுத்தி கொள்வது. அதன் மூலம் சம்பாதிப்பது.  ஆனால் இவர்கள் உண்மையை அறியாத மூடர்கள் என்று சாடுகிறார். இவர்கள் பொதுவாக வெளிவேசம் போடும் வேசிகள்  ஆவார்கள் . தீட்சை பொறுத்து பணம் வாங்கும் குருக்களும்(போலி) உண்டு,  பலவித மாலைகளையும் ,மத சின்னங்களையும் தேகமெங்கும் அணித்து கொண்டு தம்மையே கடவுளாக காட்டிக்கொண்டு பணம் சம்பாதிக்கும் கூட்டமும் இங்கு உண்டு.

சில குருக்கள் , நீண்ட சடையைக்  கொண்டும், புலித்தோல் வைத்திருந்தும் ,உடலெங்கும் சாயம் பூசிக்கொண்டும் , சாம்பல் பூசிக்கொண்டும் தாங்கள் மிகச்சிறந்த யோகிகள் என்றும் கூறுவார்கள் .சிவ தீட்சை தருகிறேன் என்றும் திருமாலை நாங்கள் கண்ணால் கண்டோம் என்றும் கூறுவார்கள்.
இவர்கள் தம்மையே ஞானிகள் என்றும் கூறிகொள்வார்கள்.
" நீண்ட ஜடாமுடி தரித்த எல்லாரும் ஞானிகள் அல்ல ",
" புலித்தோல் வைத்திருக்கும் எல்லாரும் யோகிகள் அல்ல".
" தம்மையே குருவென்று சொல்லிகொள்ளும் யாவரும் உண்மையான குரு அல்ல" .

இவையெல்லாம் , தம்மை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டவும், சமுகத்தில் தமது அந்தஸ்தை உயர்த்திகொள்ளவும் தான் .உண்மையான பரிபூரணத்தின் காரணத்தை இவர்களால் புரிந்து கொள்ள முடியாது ,ஏனெனில் மாயையில் இவர்கள் மாட்டிகொண்டார்கள்   என்பதே உண்மை.

இன்றைய சாமியார்கள் வலம்வருவது வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் விலை உயர்ந்த வாகனங்களில் தான். உண்மையான குருக்களோ தம்மை வெளிப்படுத்தி கொள்ளமால் பிச்சைக்காரர்களாக தெருவெங்கும் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
"உண்மையான குரு உம்மையே தேடி வருவார்" என்பதே உண்மை.
இதுவே சித்தர்களின் வாக்காகும். உங்களின் குரு யாரென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் சித்த தலைவன் ,சித்தமுனி ,தமிழ் முனி அகத்தியரை வழிபடுங்கள் . அவரே உங்களுக்கு வழி காட்டுவார்.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

வால்மீகரின் சூத்திரத்திலிருந்து(சரியை,கிரியை,யோகம்,ஞானம்)...

நேற்றைய தொடரில் வால்மீகர் நம் உடலில் நடக்கும் சுவாசத்தை வைத்து விளக்கம் கூறினார்.   இன்றைய பதிவில் நிகழ் காலத்தில் நடக்கும்  நிகழ்வுகளை கொண்டு விளக்கி கூறுகிறார்.

ஆமாப்ப வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
     அவரவர் கண்டதையெல்லாம் சரிதை என்பார்
ஓமப்பா கல் செம்பைத் தெய்வமென்றே
    உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார்
வாமப்பா  யோகமென்று கனிகாய் தின்று
    வாய்பேச ஊமையைப் போல் திரிகுவார்கள்
காமப்பா ஞானமென விண்டு மேலும்
   காக்கைபித்தன் மிருகம் போல் சுற்றுவாறே

விளக்கம்:
 இன்றைய பதிவானது தெளிவான தமிழில் உள்ளது இருப்பினும் எமக்கு தெரிந்த கருத்துகள் பின்வருமாறு.
சரியை :  பல நூல்களை கற்றுக்கொண்டு எல்லாம் தெரிந்த மாதிரி நடந்து கொள்வது

கிரியை : கல்,செம்பு சிலைகளை வைத்துகொண்டு பூசை செய்து அதைகொண்டு     
                  மனமுருக அழுகுவது மற்றும் மகிழ்வது.

யோகம்:  சரியாக உணவு உண்ணாமல் வெறும் காய் கனிகளை உண்டுகொண்டு
                 யாரிடம் பேசாமல் ஊமைப்போல் யோகம் பண்ணுகிறேன் என்று கூறுவது .

ஞானம்: ஞானத்தை தேடி காடு மலைகளில் அலைவது.
              எவ்வாறு      காக்கைக்கும்  ,பித்தனுக்கும் மற்றும் மிருகத்திருக்கும் எந்தவொரு     இடமும்    சொந்தமில்லை , அவைகள் அதன் விருப்பதிருக்கு ஏற்றார் போல நடந்து கொள்ளும் .

"ஞானம் என்பது நம்மால் நம்முடலில் உள்ளதை அறிவது"
இதன் மூலம் அவர் கூற வரும் பொய்  சாமியார்களின் வேடத்தை நாளைய பதிவில் காணலாம்.

ஆய்வு தொடரும்..
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

வால்மீகரின் சூத்திரம்...

நேற்றைய தொடர்ச்சியிலிருந்து ....

அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
   அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்
பிரிந்து வரும் ரேசகமே யோக மார்க்கம்
  பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
   மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தான் சித்தன்
   சிவசிவா அவனவன்நென்  றுரைக்க லாமே.
விளக்கம் :
பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த கருத்து.
சரியை : மந்திரங்களினால் வணங்குவது/ சாமி படங்களைவைத்து பூசை செய்வது
கிரியை:  கற்சிலைகளையும் , செம்பினால் மற்றும்  உலோகத்தினால்  செய்த              
                 சிலைகளை   வணங்குவது.
யோகம்: தம் உடலை யோக பயிற்சியின் மூலம் இறைவனை அடைய முயற்சிப்பது.
ஞானம் : தம்முடைய அனுபவ கல்வி மற்றும்  சித்தர்களின்  வழிமுறையை  கண்டு 
                அதை பின்பற்றுவது .

ஆனால் மேற்கண்ட பாடலில் நம் உடலில் இயங்கும் சுவாசத்தை வைத்து பிரித்து கூறுகிறார் .

எல்லாரும் வாசியை(மூச்சு) கவனிப்பது இல்லை.  உள்ளே இழுக்கும் சுவாசம் , வெளி விடும் சுவாசம் என்று மட்டும் தான் நமக்கு தெரியும்.  அவற்றின் அளவுகளை  தெரிந்து கொண்டு நாம் பயிற்சி செய்தால் நாமும் சித்தன் தான் . சுவாசத்தின் மூலம் வரும் உணர்வு அற்ற நிலை தான் ஞான மார்க்கம் அதுவே வாசியாகும்( காற்றின்றி வாழ்வது ).

எப்படி வாசி பயிற்சி செய்ய நான்கு நிலைகளை தாண்டி நாம் தாண்டி வர வேண்டி உள்ளதோ அதைப்போலவே இறைவன் யார் என்று உணரவும் நாம் சில நிலைகளை தாண்டி தான் வரவேண்டும்  . இவ்வுலகில் வாழ்ந்த எல்லா சித்தர்களும் ஆரம்ப நிலைகளில் பல வித பூசை செய்தும் , கோயில் மற்றும்  குளங்கள் வெட்டியும் ,இறுதியில் தான் தாமே தங்களை அனுபவங்களின் மூலம் அறிந்து கொண்டார்கள் .
சித்தர்களைப்பற்றி தெரிந்து கொள்ள எல்லாரும் இந்த நிலைகளை தாண்டி வந்தால் தான் அவர்களுடைய வழிப்பாடு மற்றும் வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள முடியும்.

இத்தகைய சிறப்பு மிக்க இந்த உடலில் தான் சிவசத்தி உறைகிறார்கள்(சீவன்(உடல்), பிராணன்(உயிர்) ). இதனை தெள்ள தெளிவாக அறிந்து கொண்டவனே சித்தன் .
"பாமர மக்களுக்கும் இறைநிலையை எடுத்து சொல்லவே சித்தர்களால் உருவாக்கப்பட்டது தான் இன்று நாம் வழிப்படும் கோவில்கள் ."

மீண்டும் ஆய்வு தொடரும் .....
 என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

புதன், 9 பிப்ரவரி, 2011

வால்மீகர் சித்தரின் பாடலில் இருந்து..

இங்கு கூறப்படும் பாடலுக்கு விளக்கம் தெளிவாகவே பாடலிலே உள்ளது. இருப்பினும் எனக்கு தெரிந்த விளக்கத்தை கொடுத்துள்ளேன் .

வந்ததுவும் போனதுவும் வாசி யாகும்
    வானில் வரும் ரவிமதியும் வாசி யாகும்
சிந்தைதெளிந் திருப்பவனா இவனே சித்தன்
    செகமெல்லாம் சிவமென்றே அறிந்தோன் சித்தன்
 நந்திஎன்ற வாகனமே தூல தேகம்
    நான்முகனே  கண் மூக்குச் செவிநாக் காகும்
 தந்திமுகன் சிவசத்தி திருமூச் சாகும்
    தந்தைதாய் ரவிமதி என்று அறிந்துகொள்ளே...

விளக்கம் :
வாசி       : மூச்சு பயிற்சி
                  தினந்தோறும் சூரியனும் , சந்திரனும் மாறி மாறிவந்து தங்களுடைய கடமையை செய்கிறது . அதுபோல் தான் மூச்சு காற்றும் தினம் தினம் வந்து போகிறது. எப்படி இதற்க்கு அழிவில்லையோ அதுபோல் தான் இந்த உடம்பும்.
புரிந்த கொள்ளுங்கள் எப்படி நம்ம உடம்பை அழியாமல் பாதுகாத்துக்கொள்ள .
பிரம்மா : கண் , மூக்கு, செவி, நாக்கு .(நான்கு முகம் )
நந்தி        : தூல தேகம் (உடல்) (சிவன் சன்னதியில் உள்ள நந்தி )
                 நந்தி எப்படி சிவசக்தியை சுமந்து கொண்டு செல்கிறதோ , அதுபோல் இந்த உடலானது சிவன் என்ற சீவனையும் சக்தி என்ற பிராணனையும் சுமந்து செல்கிறது .
தந்திமுகன் : பிராணன் (மூச்சு காற்று )                      
பெற்றோர்கள் : தந்தை :ரவி ,(சிவனின் இரு கண்கள் )
                             தாய் :மதி .
"சிவனை தன்னுடலில் காணும் யாவருமே சித்தன் ஆவார்கள்"
சித்தர்கள் இயற்கையை(எல்லா உயிரனங்களையும் ) தெய்வங்களாக வணங்கினார்கள் . அதனையே தங்களுடைய உடலிலும்(ஆதாரங்களில் ) அனுபவித்து கண்டார்கள். அவர்கள் ஒருபோதும் சிலை வழிப்பாட்டினை ஆதரித்ததாக எப்பாடலிலும் காணமுடியவில்லை.  அவர்களுடைய் கருத்துக்களை வரும் நாட்களில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதன் மூலம் நான் தெய்வ வழிப்பாட்டினை குறை கூறவில்லை .அதற்க்கு மேலும் ஒரு உலகம் உள்ளது அதனை புரிந்து கொள்ள முயற்சி  செய்யுங்கள் என்று கூறுகிறேன்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

சித்தர்களின் பாடலில் உள்ள உண்மையைப்பற்றி

காரைசித்தரின்  பாடலில் இருந்து,
சித்தரெல்லாம் உண்மைதனை மறைத்தாரென்றே
   செப்பிமனப் பால்குடிக்க வேண்டாம் சொன்னேன்
சித்தர் மொழி நூலதனைத் தொட்டபோதே
    சித்தரேலா மொற்றரேனச் சேர்ந்து நிற்பார்

சித்தமுறுங் குணநிரைவில் நாட்டம் கொள்வார்
   சிறிதலுக்கைக் கண்டாலும் விலகிப் போவார்
சித்தநிறை உள்ளவர்க்கே சித்தி தோன்றும்
 சித்தமிலார் வித்தையெல்லாம் சிரிப்பே கண்டீர்!.

விளக்கம் :
"என்று நீங்கள் சித்தரின் பாடல்களை படிக்க ஆரம்பித்து விட்டீர்களோ அன்றே அவர்களின் தொடர்பு உங்களுக்கு கிடைத்துவிட்டது" என்றும் அவர்கள் "உங்களிடம் தவறு இருந்தால் அதை சுட்டி காட்டி உங்களை திருத்தி கொள்ளசொல்வார்கள் ", நீங்கள் உங்களை  மாற்றி கொள்ளவில்லையென்றால் அவர்கள் உங்களை விட்டு  விலகி செல்வார்கள் " .

அவர்கள் காட்டிய வழியில் சென்றால் அவர்கள் உங்களை நன்றாக வழி நடத்தி செல்வார்கள் .
"சித்தம் முழுவதும் சித்தனைப்பற்றி நின்றால் சித்திகள் யாவும் கிட்டும்"
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

சாதி வெறி மீது மோகம் கொண்டவர்களுக்கு-குதம்பை சித்தரின் கருத்து

சித்தரின் பாடல்கள் பொதுவாக பரிபாஷையாக இருக்கும், ஆயினும் சில சித்தர்கள் வெளிப்படையாகவே தங்கள் கருத்துகளை சொல்லும் தன்மையுடையவர்களாக   இருப்பார்கள்.  இவர்களில் குதம்பை சித்தர் குறிப்பிட தக்கவர்.  அவரின் பாடலில் சில உங்களுக்காக ....

ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி
 வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய் 
வீண்சாதி மற்றவெல்லாம் ?

பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும்
தீர்ப்பாகச் சொல்வதென்ன குதம்பாய்
தீர்ப்பாகச் சொல்வதென்ன?

பார்ப்பாரை கர்த்தர் பறையரைப்  போலவே
தீர்ப்பாய் படைத்தாரடி குதம்பாய்
தீர்ப்பாய் படைத்தாரடி ?

பற்பல சாதியாய் பாரிற் பகுத்தது
கற்பனையாகுமடி குதம்பாய்
கற்பனையாகுமடி ?

ஆதி பரப்பிரம்மம் ஆக்கு மக்காலையில்
சாதிகள் இல்லையடி குதம்பாய்
சாதிகள் இல்லையடி?

சாதி வேறு என்றே தரம் பிரிபோற்குச்
சோதி வேறாகுமடி குதம்பாய்
சோதி வேறாகுமடி ?

சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை என்று
ஓதி உணர்ந்தறிவாய்  குதம்பாய்
ஓதி உணர்ந்தறிவாய்  ?

 என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

காகபுசண்டரின் பாடலில்(பெண்கள் கருவுறுதலைப்பற்றி)

எளிமையான இந்த பாடலைப்படிக்கும் போதே .விளக்கம் நன்றாக புரியும்.

பூமிபோற்  பெண்ணணங்கும்     புருசராலே
     பூத்திறக்கக் கூடியதால் வாய்திறந்தே
காமியாய் நாமிணங்க நீரைவாங்கிக்
     கருவுருவாய் நாமானோம் சிசுவின்பூச்சி
நேமியோ தந்தையுண்ட நீரையுண்டு
    நீண்டுடலும் பெரிதாகிச் சிலது நாளிற்
சாமியே யாயிடவே சாப்பாடுண்டு
தற்கித்தேன் நீபாரு  ஆண் பெண்ணென்றே..

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

புதன், 2 பிப்ரவரி, 2011

சிவவாக்கியரின் பாடல்களில் சமுதாய நோக்கங்கள்

சித்தர்களின் பாடல்களில் உள்ள தத்துவங்களை மக்களிடம் கொண்டு செல்வதே எனது குறிக்கோள்.
 கீழ்காணும் பாடலில் உள்ள விளக்கத்தை புரிந்து கொண்டால் போதும் . அடுத்தவர்க்கு சொந்தமான எந்த(பெண்) ஒரு பொருளையும் அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் வராது.
 
பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சிதோ லேலும்பினு மிலக்கமிட்  டிருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும்  பகுத்துபாரு மும்முளே.

இப்பாடலை மேற்படியாக படித்து பார்த்தாலே விளக்கம் தெரியும். நான் ஒன்று மட்டும் சொல்லவிரும்புகிறேன்.

" போகம் என்பது மனத்தால் வருவது, பணத்தால் வருவது அல்ல" .
"மோகம் என்பது உணர்ச்சியால் வருவது, உண்மையால் வருவது அல்ல".
"இன்பம் என்பது இயற்கையால் வருவது ,இயலாமையால் வருவது அல்ல ".
எல்லா இன்பமும் உன்னுள்ளே தான் இருக்கிறது, அதை நீ உணர்ந்தாலே போதும்.

மனித சாதியினால் வேறுப்பட்ட இரு மங்கைகள் தரும் சுகம் ஒன்றே ஆனால் அந்த சுகத்தை உணர்வது  நீ தான்(உடலால் ,உள்ளத்தால் ,மனத்தால்).

"சாதி வெறி வேண்டாம் நம்ம சித்தர் இனத்திலே"

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

அகத்தியரைப்பற்றி கூறும் காகபுசண்டர்...

காகபுசண்டர் பல கோடியுகம் வாழும் சித்தர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அவரின் பெருநூல் காவியம் 1000 -ல் நான் கண்ட பாடல்(142  ) .

அகஸ்தியரே பெரும்பேற்றை யடைந்தோராவர்
அம்மம்மா வெகுதெளிவு  அவர்வாக்குத்தான்
அகத்திலுரை பொருளெல்லாம்  வெளியாய்ச்சொல்வர்
அவர் வாக்குச் செவிகேட்க அருமையாகும்
அகஸ்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகஸ்தியரின் மலையுமாகும்
அகத்தியரினடையாளம் பொதிகை மேரு
அவர்மனது அவரைபோல் பெரியோருண்டோ...

எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும் ...

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.