வியாழன், 25 ஏப்ரல், 2013

வாசியின் பலன்

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

அபிராமியின் வருகைக்குப் பிறகு கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டுள்ளது .

வாசியின் பலன் :

நமது சுவாசத்தின் நீளம் 12 அங்குலம் ,அதில் வாசி பயிற்சியின் மூலம் அதனை
நாம் குறைக்கும் போது  நமக்கு கிடைக்கும்  பலன்கள்  பின்வருமாறு சிவயோக சாரத்தில் கூறப்பட்டுள்ளது .

ஒரு அங்குலம் குறைந்தால் இவ்வுலக திசையினின்று சுவாதீனபடுவான்

இரண்டு அங்குலம் குறைந்தால் ஞான செல்வம் உண்டாகும்

மூன்று அங்குலம் குறைந்தால் விவேகிஆவான் .

நான்கு அங்குலம் குறைந்தால் தூர தேசத்தில் நடக்கும் செய்திகளை கூறுவான்

ஐந்து அங்குலம் குறைந்தால் ஞான திருஷ்டி பாக்கியம் கிடைக்கும்

ஆறங்குலம் குறைந்தால் ஆகாயத்திலுள்ள சகலமும் கண்டுனுர்வான்

ஏழங்குலம்  குறைந்தால் சரிரீரம்  காயசித்தி அடையும்

எட்டங்குலம்  குறைந்தால் அணிமாசித்திகளை  அடைவான்

ஒன்பதங்குலம்  குறைந்தால் நவ கண்டங்களில் சஞ்சரிப்பான்

பத்தங்கலும்  குறைந்தால் ஒரு  தேசத்தை விட்டு மற்றொரு  தேசத்துக்கு செல்வான் .


பதினோரு அங்குலம் குறைந்தால்  தமது  ஆன்மாவை கண்டு வசனிப்பான் .

பன்னிரண்டு அங்குலம் குறைந்தால் நெடுங்காலம்  அன்ன பாணாதிகளை  நீக்கி அவாவற்றி இருப்பான் .



 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.