செவ்வாய், 26 ஜூலை, 2011

சித்தர்களின் மாந்திரிகம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கடந்த இரண்டு ,மூன்று வாரங்களாக என்னால் எந்தவொரு பதிப்பினையும் பதிவு செய்ய முடியவில்லை .  சித்தர்களின் மாந்திரிகம் என்ற ஆராய்ச்சியில்  கொஞ்சம் மூழ்கியதால் பதிவுகளை செய்ய முடியவில்லை . அதே வேலை எமது  பாஸ்போர்ட் காலாவதி  ஆகிவிட்டதால் அதனை புதிப்பிக்கவே எனக்கு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது .
 
நல்ல அனுபவங்கள் நமது அரசாங்க அலுவலகங்களில் எனக்கு கிடைத்தது  நண்பர் குருசாமி அடிக்கடி  தமது வலைப்பூவில் இன்றைய அரசியல் மற்றும் அரசாங்க அலுவலல்களில் நடக்கும் நிகழ்சிகளை குறிப்பிடுவதை  என்னால் அனுபவபூர்வமாக உணரமுடிந்தது .
 
சென்னைக்கும் திருச்சிக்கும் ஏறக்குறைய 4  தடவை செல்லவேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது .இது தான் நான் பதிவுகளை  பதிவு செய்ய முடியாதற்க்கான காரணாமாகும் .  அதேவேளை இந்த குறிப்பிட்ட காலத்தில் எனக்கு மூன்று சித்தர்களின்  மாந்திரிக நூல்கள் கிடைத்தது .
 
1 ) அகத்தியரின் மாந்திரிக காவியம்
2 ) கருவூரரின் அட்டமா சித்து
3 ) பிருகு முனிவரின் மாந்திரிக அரிசுவடி.
 
இந்த மூன்று நூல்களுக்கும் விரிவுரை இல்லை . இருப்பினும் அவர்களின் கருணையால் கொஞ்சம் கொஞ்சம் என்னால் படிக்க முடிகிறது .  இன்றைய போலி சாமியார்களின் நிலை மற்றும் அவர்கள் கூறும் வார்த்தை வித்தைகளை சித்தர்கள் பாடி இருப்பதை கண்டு வியந்து போனேன் .
 
வருகின்ற  30 ஜுலை அன்று ஆடி அமாவாசை விழா  சதுரகிரியில் நடைபெற  இருப்பதால் என்னால் பதிவுகளை  பதிவு செய்ய  கொஞ்சம் கால  தாமதமாகும் என நினைக்கின்றேன்.  சித்தர்களின் தலைமையிடம் மற்றும் அனைத்து சித்தர்களும் கண்டிப்பாக வரவேண்டிய இடமும் நாளும்  அந்த நாள் ஆகும் . இந்த நிகழ்வுக்கும் அவர்களின் ஆசி இருந்தால் மட்டுமே போக முடியும் .
 
எமக்கு மாந்திரகத்தில் நம்பிக்கை கிடையாது இருப்பினும் சித்தர்களே அதனைப்பற்றி பாடி இருப்பதால் கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆசையாக தான் இருக்கிறது .
 
வரும் பதிவுகளில் சில பாடல்களை பார்ப்போம்.


என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 5 ஜூலை, 2011

சதுரகிரியில் நாங்கள் ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  , 

நேற்றைய தொடர்ச்சி ,

மகாலிங்கத்தின் பிறந்த நாள் அன்று இரவு என்னுடைய அனைத்து நண்பர்களையும் மற்றும் சுற்றத்தில் உள்ளவர்களை அழைத்து ஒரு சிறிய விருந்தினை கொடுத்து மகிழ்ந்தேன் .

அன்று எதிர்பார்த்த பலர் வரவில்லை அவர்களின் சூழ்நிலை அப்படி இருக்க வந்தவர்களோ மனமார மகாலிங்கத்தை வாழ்த்தினார்கள் .

அன்று இரவே நாங்கள் சதுரகிரிக்கு புறப்பட்டு விட்டோம். என் மனதில் ஒரே ஒரு ஆசை இருந்தது  என் மகனின் பிறந்த நாள் அன்று அவனுக்கு ஒரு ருத்ராட்சை வாங்கி கழுத்தில் அணிய வேண்டும் என்று.

இதனை என் மனைவியிடம் சொல்லியபோது ,மகாலிங்கம் கண்டிப்பா கொடுப்பார் கவலைபடாதிங்க என்று ஆறுதல்வார்த்தை கூறினாள்.
 நாங்கள் மதுரை வந்தடைந்துவுடன் எங்கள் சதுரகிரி வழிகாட்டி ஐயா வெங்கடேஷன் எங்களை வரவேற்றார் . அதற்குபின் அவர் இமயமலையில் இருந்து வாங்கிவந்த ஒரு அற்புதமான ருத்ராச்யை என் மகனின் கழுத்தில் கட்டினார் . அதனை கண்ட நான் ஆச்சயர்ப்பட்டு போனேன்.
 நாம் நினைப்பதை இறைவன் எவ்வகையாலவது நம்மிடம் சேர்த்து விடுகிறார் என்பதனை உணர்ந்தேன் .

அதற்குபின் சுந்தர மகாலிங்கத்திடம் சென்றபோது என் மகனை பார்த்த பூசாரிகள் அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்கள் . பின் அவனை தூக்கிக்கொண்டு சுந்தர மகாலிங்கத்தின் அருகே படுக்க வைத்துவிட்டு அவனுக்கு ஒரு மாலையை அவன் கழுத்தில் போட்டு என்னிடம் கொடுத்தார்கள் .  எனக்கு ஒன்றுமே புரியவில்லை ,எல்லாம் அவன் செயல் என்று உணரபெற்றேன் .

பிறகு கும்பகிரி அகத்தியர் மடத்தை சேர்ந்த சித்தர்களிடம் ஆசி பெற்று அங்கு காலை உணவினை உண்டோம் . பின் சந்தன மகாலிங்கத்தை பார்க்க புறப்பட்டோம் .

அங்கும் நல்ல வரவேற்பு ,அனைவரும் மகாலிங்கத்தை வாழ்த்தினார்கள் .
 நான் அங்கு சென்று ஏறக்குறைய எட்டு மாதங்கள் ஆகிவிட்டது அவனின்றி அவன் தாள் வணங்க முடியாது என்பது போல் அவன் அருளின்றி சதுரகிரி மலை ஏற முடியாது என்பதனை நான் உணர்ந்தேன் . அன்று மாலை அருமையான அபிஷேகங்கள் நடந்தது . அதற்க்கு பின் மகாலிங்கத்திடம் என் மகனுக்காக வேண்டி கொண்டோம் .

அங்கு அபிசேகம் நடந்த போது சந்தன மகாலிங்கத்தின் முகத்தில் பல உருவங்கள் தோன்றி மறைந்ததை எங்களால்  காண முடிந்தது . நந்திக்கு ரொம்ப முக்கியத்துவம் ஏன் கொடுக்கப்படுகிறது என்ற ஞானம் எனக்கு அன்று தான்
கிடைத்தது .

பிறகு மெதுவாக மழை பெய்ய தொடங்கியது , இதுவும் ஒரு அதிசயம் தான் .
பக்தர்களின் குறையை கேட்பதில் மகாலிங்கத்துக்கு நிகர் யாரும் இல்லை .

நாங்கள் மலை ஏறும்போது என் மனைவி வெங்கட் ஐயாவிடம் கூறினாள்  , இன்னைக்கு மழை பெய்தால் நாங்க வந்தத அவர் ஏற்றுக்கொண்டு விட்டார் என்று . அதே போல் மழையும் பெய்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .
மறுநாள் காலை என் மகனை சந்தன மகாலிங்கத்திடம் ஒப்படைத்துவிட்டேன்.

அவனை மகாலிங்கத்தின் முன் படுக்க வைத்து சித்தர்களிடம் ஒப்படைத்துவிட்டு பின் தத்து எடுத்துகொண்டோம் . இனிமேல் அவன் எங்கள் சொத்து இல்லை என்றும் இனிமேல் அவன் சித்தர்களின் சொத்து என்று கூறி  சத்திய பிரமாணம் எடுத்து கொண்டோம்.

இனிமேல் நாங்கள் வளர்ப்பு தந்தையும் தாயுமாக மகாலிங்கத்தை பார்க்கும் பொறுப்பினை சித்தர்கள் எங்களிடம் தந்து விட்டார்கள் .

பிறகு மதுரை வந்து அன்னை மீனாட்சியை தரிசினம் செய்து கொண்டோம்.
என் மகன் மதுரை கோயில் இறங்கி தானே நடக்க ஆரம்பித்து விட்டான்.
யார் கூப்பிட்டும் அவன் செல்லவில்லை அதுவும் எனக்கு ஒரு ஆச்சர்யமாக இருந்தது .

நாளைய பதிவில் இருந்து சித்தர்களின் பாடல்களையும் அதற்க்கான விளக்கத்தையும் நாம் மீண்டும் தொடருவோம் ...

 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 4 ஜூலை, 2011

மகாலிங்கத்தின் பிறந்த நாள் .....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனது மகனின் பிறந்த நாளுக்கு ஆசிர்வதித்த அனைத்த நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

முகம் தெரியாத உள்ளங்கள் வாழ்த்துவது என்பது உண்மையிலே மிகச் சிறந்தது. 
எவ்வித எதிர்ப்பார்ப்பையும் எதிர்பாராமல் வாழ்த்துவது அதைவிடச் சிறந்தது.

எனது மகனின் பிறந்த நாளன்று மதியம் கௌதம புத்தர் அறக்கட்டளையில் அன்னத்தானம் நடைப்பெற்றது . காது கேளாதோர் மற்றும் பேச முடியாத நிறைய குழந்தைகள் அங்கு இருக்கிறார்கள்.  அவர்கள் கூறிய நன்றி வார்த்தையும் ,அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததையும் நான் கண்டபோது எனது இரண்டு கண்களும் குளமாகி விட்டது .

அழகான பெண் குழந்தைகள் ஆனால் பேசமுடியவில்லை இருப்பினும் மகாலிங்கத்தை(என் புதல்வன் ) தூக்கி கொண்டு அவர்கள் கொஞ்சியத்தை என்னால் மறக்க முடியாது.

அங்குள்ள முதியவர்களிடம் அவன் விளையாடியதை நினைக்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது. அவர்களுடன் நாங்களும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவினை உண்டோம். 
வாழ்வில் மிக சந்தோசமான நாளாக அது அமைந்தது.  இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு மருந்தாக (மன நோய்க்கு )அமைந்தது .

என்னை ஈன்ற என் பெற்றோர்கள் கூட என்னை கூப்பிட மனமில்லாதவர்களாக உள்ள இந்த நிலையில் யாரும் ஆதரவற்ற பிஞ்சு உள்ளங்களை பார்த்த போது எனக்கு உலகமே ஒரு மாயை என்ற தத்துவம் உணர்ந்தது.

சித்தர்களை வழிபடுவதும் அவர்களின் வாழ்வியல் பாதையில் நடப்பதும் என்பது சாதாரண விஷயம் அல்ல .

அவர்களின் வழிகாட்டுதல் படி நான் சாதி , சமயங்களை வெறுத்து கலப்பு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறேன். திருமணத்தினால்  நான் அனைத்தையும்(பெற்றோர்களை ) இழந்துவிட்டேன்.

உயிருடன் இருக்கும் என்  ஐயா மற்றும்  அம்மாவை(பெற்றோர்கள் )வாயார கூப்பிட முடியாத அளவிருக்கு நான் பாவியாகிவிட்டேன் . ஆகையால் தான்  நான் உலகில் உள்ள அனைத்து உள்ளங்களையும் ஐயா என்றும் அம்மா என்றும் கூப்பிட்டு வருகிறேன்.

பெற்ற தாயே ஆயினும் கலப்பு என்பதை விரும்பமாட்டாள் போல் இருக்கிறது.

உண்மையிலே எனக்கு சித்தர்கள் நடத்துக்கின்ற ஒவ்வொரு பரிட்சையும் வித்தியாசமாக தான் இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.  இருப்பினும் அவர்களின் கருணையால் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்து வருகிறேன்.

இதனையே பட்டினத்தார் பின்வருமாறு கூறுகிறார்..

பிறக்கும்பொழுது  கொண்டுபோவதில்லைப்  பிறந்துமண் மேல்
இறக்கும்பொழுது  கொண்டுபோவதில்லைப்  இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்த தென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே ..

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
  அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பிள்ளை எத்தனை எத்தனை பெண்டிரோ
   பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
    மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
    என்செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே ..
  
மகாலிங்கத்துடன் சதுரகிரி சென்றதை நாளைய பதிவில் காணாலாம் ...

என்றும்-சிவனடிமை-பாலா.