புதன், 21 மார்ச், 2012

நீரழிவு நோய்க்கு இயற்கை மருத்துவம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

நீரழிவு நோய்க்கு இயற்கை மருத்துவம்...
அன்பர் குருசாமியின் பதில் கண்டு மிக மகிழ்வுண்டேன் . 

மூலைக்கு மூலை அக்குபஞ்சர் மருத்துவர்கள் பெருகிவிட்டார்கள்  என்பது உண்மை தான் . இந்த மருத்துவத்தை நானும் தற்சமயம் தான் பயின்று வருகிறேன்.  எல்லாரும் கற்று கொள்ள கூடிய எளிமையான மருத்துவம் தான் . நீங்களும் பயின்று மருந்தில்லா மருத்துவ துறையில் மக்களுக்காக பணியாற்றுங்கள் .  உடலில் ஓடும் சக்தி ஓட்டத்தை கொண்டு நோயை குணபடுத்தும் அருமையான மருத்துவம்  தான் இது.

உடலில் உள்ள மண்ணீரல் உறுப்பினை நன்கு வைத்து கொண்டால் நமக்கு எந்தவொரு பாதிப்பும் வராது .  இன்சுலின் இல்லாமலும் நமது உடல் இயங்கு வண்ணம் இறைவன் அற்புதமாக படைத்துள்ளான் .

என்று மனிதன் உடல் உழைப்பினை மறந்தானோ அன்றோ நோய்களுக்கு
அடிமையாகிவிட்டான் . இன்சுலின் தேவையை குறைத்து கொண்டு மாற்று முறையில் வாழ கற்றுகொண்டால் அவனுக்கு நிச்சயம் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

எளிமையான முறையில் நாம் இயற்கையோடு ஒத்து வாழ கற்றுக்கொண்டால் நோயினை கண்டு பயப்பட தேவையில்லை .

நோய் என்பது மனிதனுக்கு இயற்கை உணர்த்தும்   ஒரு அறிகுறி தான் . நமது உணவு முறையில் மாற்றம் ஏற்படும் போது தான் நோய் வருகிறது.

உண்ணும் உணவினை கவனித்தால் போதும் நோயின்றி வாழலாம் .

உணவே மருந்து . மருந்தே உணவு ...

தினந்தோறும் ஒரு கைப்பிடி முருங்கை கீரையை  சாப்பிடுவதற்கு
முன்பு சாப்பிடுங்கள்.


தினந்தோறும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிடுங்கள் .

தினந்தோறும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை சாப்பிடுவதற்கு
முன்பு சாப்பிடுங்கள்.

முடிந்த அளவு நடைப்பயற்சியை மேற்கொள்ளுங்கள் .

நீரழிவு நோயை முற்றிலும் நம்மால் ஒழிக்க முடியும்.

நாளைய பதிவில் எந்த வகையான உணவுகளை சேர்த்து கொள்ள
வேண்டும்  என கூறுகிறேன்.


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 20 மார்ச், 2012

நீரழிவு நோயில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி ?

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

நீரழிவு நோயில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி ...

இந்த தலைப்பை பார்த்தவுடன் எல்லாருக்கும் எப்படி நாம் அந்த நோயில் இருந்து மீளபோகிறோம் என்ற எண்ணம் தான் வரும்.  முதலில்  நீங்க தெரிந்த கொள்ளவேண்டியது சர்க்கரை நோய் என்பது நோயே அல்ல .
அது நமக்கு எச்சரிக்கை செய்கின்ற ஒரு நோய் தான்.

நமது உடலில் உள்ள இன்சுலின் அளவு குறையும் போதோ  அல்லது அதிகரிக்கம்போது உடலில் ஏற்படும் மாற்றமே சர்க்கரை நோயாகும் .

இதனை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.
1 ) பரம்பரை நோயாக வருவது .
       ஆங்கில மருத்துவம் இதனை குணபடுத்த முடியாது என்று கூறுகிறது.
"முயன்றால் முடியாது எதுவும் இல்லை ."

2 ) மன அழுத்தத்தினால் வருவது .
     இதனை எளிதாக குணப்படுத்தலாம்.

"மனநோய் தான் எல்லா வியாதிகளுக்கும் தாய் ."

சுலபமாக சர்க்கரை நோய் தீர்க்கும் வழிகள் :
1 ) எட்டு நடை பயிற்சி தினந்தோறும் 20  நிமிடம்.
2 ) வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி முருங்கை இலைகளை சாப்பிடுவது.
3 )  வாரம் ஒரு முறை அக்குபஞ்சர் சிகிச்சை .

நிச்சயமாக குணமாக்க கூடிய வியாதி தான் இது .

தொடரும் ....

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 19 மார்ச், 2012

பரங்கிப்பேட்டையில் பாபாஜியின் அருகில்....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பரங்கிப்பேட்டையில் பாபாஜியின் அருகில்....

பலநாட்களாக என்னால் எந்தவொரு பதிப்பினையும் பகிர்வு செய்ய முடியவில்லை .

இரண்டு வாரங்களுக்கு முன்னால் நாங்கள் பாபாஜி அவதரித்த புண்ணிய பூமிக்கு சென்று இருந்தோம்.   அங்கு தரிசனம் முடிந்த பிறகு ,கொஞ்ச நேரம் தியான செய்து விட்டு போகலாம் என்று எண்ணம் கொண்டு இருந்தேன்.  நானும் என் நண்பனும் தியானம் செய்ய ஆரம்பித்தோம். ஆனால் அவனுக்கு தியானம் செய்ய தெரியாது , கொஞ்ச நேரம் கண்ணை மூடி கொண்டு பாபாஜியின் நாமத்தை சொல்லி கொண்டு இரு என்று சொல்லிவிட்டு தியானத்தை ஆரம்பித்தோம்.

கொஞ்ச நேரம் கழித்து ,எனக்கு அருகே யாரோ ஒருவர் உட்கார்ந்து கொண்டு வாசியை ஏற்றி கொண்டு இருந்தார் . என்னுடைய எண்ணம் எல்லாம் என் நண்பனின் மேல் இருந்தது .  ஏறக்குறைய 20  நிமிடங்கள் கழித்து நான் எனது கண்களை திறந்து அருகில் இருந்த என் நண்பனை பார்த்தேன் . அங்கு யாருமே இல்லை என்னை தவிர .
 ஒருவேளை இப்போதுதான் எழுந்திருந்து போய் இருப்பான் என்று எண்ணம் கொண்டு வெளியே வந்தேன் . 

ஆனால் என் நண்பனோ, வெளியே  என் மகனிடம் விளையாடி கொண்டு இருந்தான் . உடனே எனக்கு ஒரு எண்ணம் வந்தது .  என் நண்பனிடம்
எப்பொழுது தியானத்தை விட்டு வெளியே வந்தாய் என்று கேட்டேன்.

அவனோ நான் ஒரு 3  நிமிடங்கள் தான் உட்கார்ந்து இருந்தேன் . அதற்க்கு அப்புறமா என்னால் உட்கார முடியல என்று கூறினான்.

எனக்கு ஒரு சந்தோசம் , ஆச்சர்யம் ,பாபாஜியின் அருகில் இருந்து தியானம் பண்ணியதை நினைத்து கொண்டு இருந்ததை .


மறக்க முடியாத நினைவுகளோடு .....பாபாஜியின் துணையோடு ....


 
நீரழிவு நோயின் தன்மையையும் அதனை குணமாக்கும் மருத்துவத்தை   அறியும் முயற்சியில் ஈடுபட்டு அதில் ஓரளவு  வெற்றிபெற்றுள்ளேன். அதற்க்கான மருத்துவ செலவு ஒன்றும் இல்லை ,நீங்கள் உங்களைப்பற்றி நன்றாக தெரிந்து கொண்டு இயற்க்கை வைத்தியத்தின் மூலம் உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்.

வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளோடு வாழவேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு கிடையாது .


அதைப்பற்றிய விபரங்கள் வரும் நாட்களில் காணலாம் .


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.