செவ்வாய், 24 ஜூலை, 2012

அமுரி என்னும் அமிர்தம் ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

சித்தர்களின் பாடல்களுக்கு விளக்கம் எழுதுவது என்பது அவர்களின்
கருணையினால் மட்டுமே முடியும். அதை தவிர அவர்களின் பாடல்களை
படிக்கும் ஒவ்வொரு ஆத்மாக்களின் நிலைக்கு ஏற்ற மாதிரியாக அப்பாடல்களின்  பொருள்  இருக்கும்.

குறைகள் இருப்பின்  மன்னிக்கவும் .


//உண்ணும்போ துயிரெழுத்தை உயர வாங்கி
**அமுரி என்னும் அமிர்தத்தை உண்ணும்போது "அ " என்னும் உயிர் எழுத்தை உயர எழுப்பதல்.
//உறங்குகின்ற போதெல்லா மதுவே  யாகும்
**தூங்கியும் தூங்காமலும் உள்ள   நிலை -மஹா  சாம்பவி முத்திரை உபயோகிக்கும் நிலை.//பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
**சிவன் என்ற அமுரியை சக்தி என்ற இந்த ஸ்தூல உடலில் இறக்கும் முறை // பேணிவலம் மேல்நோக்கி அவத்தில்  நில்லு
**அமரியை உண்ணும்போது உடல் உள்ள நிலை // திண்ணுங்கா யிலைமருந்து மதுவே  யாகும்
**வாசி என்ற பயிற்சியின் மூலம் கிடைக்கும் இந்த மருந்தினை // தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
**தினந்தோறும் ஒழுக்கம் தவறாமல் இந்த பயிற்சியை செய்பவர்கள் //மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
**இந்த மண்ணுலகம் உள்ளவரை இறப்பு என்பது வராது //மறலிகையில் அகப்படவு மாட்டார் தானே .
**இறப்பினை தரும் எமன் கையில் அகப்பட மாட்டார்

 எளிமையான விளக்கம் :

சிவத்தால் உருவாக்கப்பட்ட வாசி என்ற பயிற்சியை குருமுகமாக
பயின்று  அதன் மூலம் உண்டாகும் அமுரி என்ற அமிர்தத்தை உண்டு வாழ்ந்தால் இறப்பின்றி வாழலாம் .

அகத்திய மாமுனியின் அருளினால் எல்லாருக்கும்( உண்மையில் பரம்பொருளை அடைய விரும்பும் ஆத்மாக்கள் ) இந்த அமிர்தத்தை  கிடைக்க பிரார்த்திப்போம் .


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 11 ஜூலை, 2012

அகத்தியர் ஞானம்-உயர் ஞானம் .

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

அகத்தியர் ஞானம்-உயர் ஞானம் .

உண்ணும்போ துயிரெழுத்தை உயர வாங்கி
       உறங்குகின்ற போதெல்லா மதுவே  யாகும்
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
       பேணிவலம் மேல்நோக்கி அவத்தில்  நில்லு
திண்ணுங்கா யிலைமருந்து மதுவே  யாகும்
      தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
      மறலிகையில் அகப்படவு மாட்டார் தானே .

விளக்கம் :

கூடிய விரைவில் ........


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.