வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பதிவுகளை பதிக்க முடியாமை ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

இறையின் பணியில் சில நாள் , பணியின் பணியில் பல நாள்

தேடலின் முடிவில்   சில  நாள் ,  தெளிவின் முடிவில் பல  நாள்

வாசியின் முடிவில் சில  நாள் ,  வாழ்வின் தெளிவில் பல நாள்

செயல்கள் எல்லாம் சில நாள் அதன் செயல்பாடுகள்  எல்லாம் பல நாள் .

என்று சித்தர்களின் சிந்தனை கொண்டு உலா வந்து கொண்டு இருக்கிறேன்.


 அவர்களின் அனுமதியுடன்  தொடர நினைக்கும் ....

 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் .

அன்புள்ள  சித்த உள்ளங்களுக்கு  ,


இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் .

நீண்ட நாட்களுக்குப்  பிறகு உங்களை  சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி , அடியேனின் வாழ்கையை என்னவென்று சொல்வதென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாம் அவர்களின் பாதங்களில் ஒப்படைத்தபின் என்னால் எதுவும் தனித்து இயங்கமுடியவில்லை.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது போல ......

அவர்களின் பார்வை இன்றி எம்மால் ஒரு செயலும்  செய்யமுடியவில்லை .

எம்மால் இயன்ற அளவிற்கு இந்த வலைத்தளத்தை மேம்படுத்த முயற்சிக்கிறேன்..

சொக்கநாத வெண்பாவில் .....

நீயே ஒளித்திருப்பை  நீயென்றும் காணாமல்
நீயே ஒளித்திருப்பை  நின்னருளால்  நீயே தான்
காட்ட அன்னியமாய்க்  கண்டேன்  உனது வினை
யாட்ட தென்ன சொக்கநாதா ...


சிவபோக சாரத்தில் 

கூட்டுவதுங் கூட்டிப் பிரிப்பதுவம் ஒன்றென்றை
ஆட்டுவதும்  ஆட்டி அடக்குவதுங்  காட்டுவதும்
காட்டி மறைப்பதுவுங் கண்ணுதலோன்  முன்னமைந்த
ஏட்டின் படியென் றிரு ......


எல்லாம் அவன் செய்ய நினைக்கும் போது .....யாம் என்ன செய்ய  இயலும் .

மேற்கூறிய இரண்டு பாடல்களுமே அவனின்றி ஒன்றுமில்லை  என்பதையே
குறிக்கிறது.


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.