வியாழன், 27 அக்டோபர், 2011

பதினெண்பேரை காணும் மந்திரம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
    
"பதினெண்பேரை காணும் மந்திரம்" என்றதும் நமக்கு ஞாபகம் வருவது நமது பதினெட்டு சித்தர்களை தான் அதில் நமக்கு எந்தளவும் சந்தேகம் இல்லை.  இருப்பினும் இந்த பதினெட்டு என்பதில் பலவித கருத்துகள் உள்ளன.  இவற்றை கடந்தவர்கள் தான் சித்தர்கள் என்று ஒரு சாரர் கூறுவார். ஆகையால் தான் ஐயப்பசுவாமிக்கு பதினெட்டு படிகள் அமைத்தனர் . இந்த பதினெட்டு படியின் தன்மையை உணர்ந்தால் தான் ஐயப்ப சுவாமி போல் மரணமில்லா பெருவாழ்வை நம்மால் அடையமுடியும் என்ற தத்துவத்தை தான் நமது மூதாதையார்கள் செய்துவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால் அதனை உணர்ந்தவர்கள் வெகு சிலரே இவ்வுலகில் உள்ளனர்.

தமிழர்களின் ஞான பொக்கிஷமான ஞானக்கோவையில் இருந்து பதினெட்டு சித்தர்களை தரிசிக்கும் முறையை நிஜானந்த போதம் பின்வருமாறு கூறுகிறது.

நிஜானந்த போதம் : 41 

செய்ததமிழ் தனையறிந்து  பதினெண் பேரைச்
   செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு
சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச்
   சதாகாலம் ஓம் சிங்ரங் அங்சிங் கென்று
மெய்தவறாப் பூரணமா யுருவே செய்தால்
   வேதாந்த சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய்
உய்தமுடன் அவர்களைத்தான்  வசமாய்க் கண்டால்
   உத்தமனே சகலசித்துக் குதவியாமே...


"ஓம் சிங்ரங் அங்சிங் " -என்று குறிப்பிட்டு உள்ளார்கள் .

முயற்சித்து பார்ப்போம் சித்தர்களை காண. ....

 
என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 26 அக்டோபர், 2011

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ....

இத்திருநாளில் மனதில் உள்ள  அனைத்து தீய எண்ணங்களையும் சுட்டெரித்துவிட்டு நல்ல எண்ணங்களுடன் ஒரு இனிய வாழ்க்கையை தொடருங்கள் .

உங்களால் மனதில் உள்ள தீய எண்ணங்களை குறைக்கமுடியவில்லைஎன்றால் பதிநென்மர் சித்தர்களின் பாதங்களை இத்திருநாளில் சரணடையுங்கள் .

குரு யாரென்று தெரியாதவர்களுக்கும் ஆன்மிகம் என்றால் என்ன என்று தெரிய விரும்புவர்களும் சற்குரு அகத்தியரின் பாதங்களை சரணடையுங்கள் .

அவரை அடைய விரும்பும் உள்ளங்கள் கீழ்வரும் மந்திரங்களை கூறலாம் .

சத்தியமே அகத்தியம் ,அகத்தியமே சத்தியம் .

ஓம் அகத்தியரே போற்றி ஓம் .

ஓம் குருமுனியே போற்றி ஓம்

குருநாதரின் காயத்ரி மந்திரம் ..

ஓம் தத்புகுஷ்யா வித்மஹே
லோபமுத்ரா சமேதாயே தீமஹி
தன்னோ அகஸ்திய ப்ரோசோத்யாத்..

ஓம் அகத்தீசாய வித்மஹே
பொதிகை சஞ்சார தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரோசோத்யாத்.


மேற்கண்ட மந்திரங்களை தினந்தோறும் 108 முறை காலையும் ,மாலையும்  செபிப்பவர்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளி தருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.  இது அனுபவ வாக்காகும்.

கடந்த பதிவில் கூறிய கதவு என்பது லலாட கதவாகும். வாசி பயிற்சியை கொண்டு அந்த கதவினை திறந்தால் மரணமில்லா பெருவாழ்க்கையை நம்மால்  அடைய முடியும் என்பது சித்தர்களின் கூற்றாகும் . இதனைப்பற்றி காகபுசண்டர் தமது பெருநூல் காவியம் -1000 த்தில் வெகு தெளிவாக கூறியுள்ளார்.


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

வியாழன், 20 அக்டோபர், 2011

குரு என்பவர் யார் ?

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

குரு என்பவர் யார் ? என்ற கேள்வியை பார்க்கும்போதே எனக்கு தலை சுற்றுகிறது. எனக்கு தெரிந்த கருத்துகளை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

யாரையும் நாம்  தரக்குறைவாக  பேசக்கூடாது . ஏனென்றால் நமக்கு தெரிந்த விசயங்களை விட நமக்கு தெரியாத விஷயங்கள் தான் இவ்வுலகில் அதிகம் உள்ளது.

இதை தான் அவ்வை அம்மையாரும் அழகாக கூறுவார் //கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு //.

பொதுவாக நதிமூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது என்று கூறுவார்கள் . இதற்க்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை கூறுவார்கள் .  நதி என்பது மலைகளில் தோன்றி பல நாடு நகரங்களை வளம் கொழிக்க வைத்துவிட்டு இறுதியில் கடலில் கலக்கிறது.
மலையில் அதன் குணம் மூலிகை நிறைந்ததாக இருக்கும் . நகரங்களில் அது மாசுப்பட்டு இருக்கும் இறுதியில் எப்படி இருக்கும் என்பதை நம்மால்  கணிக்க முடியாது.

இதனை ஏன் ரிஷிகளுடன் ஒப்பிட்டு பார்த்தார்கள் என்று பார்த்தால் நமக்கு ஆச்சர்யமாக தான் இருக்க செய்கிறது .   ஒருவன் எப்படி வாழ்ந்தான் ?எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறான் ? எப்படி வாழ்வான் ? போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாலே போதும் ரிஷி என்பது என்னவென்று புரியும் .

நதி -பாரபட்சமின்றி எல்லா இடத்தில் பாய்ந்து அனைவரையும் வாழ வைக்கும்.
ரிஷி -பாரபட்சமின்றி எல்லா மக்களையும் நேசித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டும்.

இவ்வுலகில் எல்லாரும் கூறும் மந்திரம் ...

       மாதா பிதா குரு தெய்வம்.- இதனை எந்த மதத்தினாராலும் மறுக்க முடியாது.

மாதா -இவ்வுலகில் நம்மை முதலில் அறிமுக படுத்துபவள் .
பிதா  -இவ்வுலகில் நமக்கு வெளியுலக வாழ்க்கையை அறிமுக படுத்துபவர் .
குரு   -இவ்வுலகில் தெய்வம்/வாழ்க்கை  என்ற தத்துவத்தை விளக்குபவர் .
தெய்வம் - குருவின் அருளோடும் துணையோடும் தெய்வத்துடன் ஒன்றி போதல் .

//ஒன்றும் இல்லாத பரவெளியே தெய்வம்//

ஆகையால் தான் இவ்வுலகில் பிறக்கும் எல்லாரும்  முதலில் அம்மா என்றும் பின் அப்பா என்றும் கூறி பிற்காலத்தில் படிக்கும் காலத்தில் ஐயா என்று வணங்கி இறுதியில் சிவசிவ என்றோ கோவிந்தா என்றோ வாழ்க்கை முடித்து கொள்கிறோம்.
அம்மா -> அப்பா -> ஐயா ->இறைவா
மேற்கூறியதில் ஒன்று குறைந்தாலும் கூட நமக்கு சிக்கல் தான் .

நமது வாழ்க்கை எப்படி ஒத்து போகிறது என்று நீங்களே பாருங்கள் . இதில் இடையில் வரும் "குரு " என்பது தான் பிரச்சனையே . எப்படி இந்த பிரச்னையை சமாளிப்பது என்பது தான் மதி.

கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை நினைத்து பெற்றோர்கள் அஞ்சுவார்கள் ஏனென்றால் ரெண்டாம்கெட்ட வயசு என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்று .  அதுபோல தான் குருவை தேர்ந்து எடுப்பதிலும் நமக்கு நிறைய பயம். என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.

இன்று எந்த செய்தித்தாளை எடுத்தாலும் போலி சாமியார்கள் கைது , கற்பழிப்பு வழக்கு , கொலை வழக்கு போன்ற செய்திகள் தான் நமது கண்களில் படுகிறது.  அப்படி இருக்க எப்படி உண்மையான குருவினை எப்படி  கண்டுபிடிப்பது ? ரொம்ப கஷ்டமான கேள்வி .

"கதவை திற காற்று வரட்டும் "- என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் உண்டு. இதில் எந்த கதவு என்பது தான் பிரச்சனையே !. ஆக மொத்தம் கதவை திறக்க வேண்டும்.

நாளை திறக்கலாம் ...


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 19 அக்டோபர், 2011

தமிழ் மந்திரங்களின் தொடர்ச்சி...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

தமிழ் மந்திரங்களின்  தொடர்ச்சி..

தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள் .
தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கொண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" போன்ற எழுத்துகளை(பீஜங்கள்)  சேர்த்து கொண்டு உச்சரிக்கும்போது பலவித சித்திகளும் ,முக்தியும் கிடைக்கும் என பிருகு முனிவர் கூறுகிறார்.

முதலில் "அம்" என்று செபம் செய்து ,பிறகு "ஆம்" என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்", "ஊம்","எம்",
"ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாக
செபம் செய்யவேண்டும் . மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .
இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார். 

பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.  முதலில் "கங்" என்றும், பிறகு தொடர்ச்சியாக எல்லா மெய் எழுத்துகளுடன் இந்த பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.


உதாரணமாக :
முதலில் "ஓம்"  பிறகு "அம்" இறுதியில் "நம:" என்று உச்சரிக்கலாம் .
"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.
"ங்" பீஜத்தை சேர்த்து  மந்திரம் கூறும் முறை ..
 "ஓம் அங் நம: " என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.

நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை பெறலாம் என்று கூறுகிறார்.

இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது மைவிழியாள் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார் இவ்வாறு செய்தால் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் நிச்சயம் கிடைக்கும் என கூறுகிறார்.

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....
ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் . 
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்

ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்.

பிருகு முனிவரின் அருள்(உங்களுக்கு ) இருந்தால் மேற்கூறிய மந்திரங்களை  உச்சரித்து
பலன்களை பெறவேண்டுகிறேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 17 அக்டோபர், 2011

தமிழ் மந்திரங்களை உச்சரிக்கும் முறை ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

மந்திரத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய என்னால் பதிவுலகத்தை பற்றிய 
சிந்தனை கூட வரமுடியாத  அளவுக்கு ஆகிவிட்டது. 

தமிழ் மந்திரங்களை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியபோது  எமது வர்மானிய  நண்பர் ஒருவரை சந்திக்க நேரிட்டது . அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழ் மந்திரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைத்து  கொண்டேன். பிறகு உரையாடி கொண்டு இருக்கும் போது தமிழில் உள்ள மந்திரங்கள் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்று வினவினேன் . 

அவர் சித்தர்கள் காட்டிய வழியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் .  அவர் சிரித்து கொண்டு தமிழ் மொழியை  தெரிந்து கொண்டவனுக்கு இறப்பு என்பதே கிடையாது என்று கூறினார்.  இதை என்னால் நம்ப முடியவில்லை . இருப்பினும்   நான் அனுமார் மந்திரம் ஒன்றினை ஆராய்ச்சி செய்து கொண்டு இருப்பதாக அவரிடம்  கூறினேன்.   என்னை பொறுத்த வரை அவர்க்கு எந்த மந்திரமும் தெரியாது என்ற எண்ணத்தில் கூறினேன் . அவர் என்னை பார்த்து அந்த மந்திரத்தை கூறும்படி சொன்னார் . 

நான் அந்த மந்திரத்தை சொல்ல  ஆரம்பித்தேன் அவ்வளவு தான் அதற்குள் அவரிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டு  பட பட வென்று  அந்த மந்திரத்தை கூறிவிட்டு அதனை உச்சரிக்கு்ம் முறையையும் அதன் பலனையும் கூறினார் .
என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை . 

ஒரு வாரம் காலமாக நான்  அதைப்பற்றி சிந்தனையில் இருந்து கடைசியில் ஒரு கிறித்துவர்  மூலமாக அதன்  உட்கருத்தை தெரிந்து கொண்ட போது சித்தர்களின் வல்லமையை நினைக்கவே ஆச்சர்யமாக இருந்தது. 

அவர் சித்தர்களை பற்றி கூறும்போது
 " மனிதர்களுக்காக என்றும் வாழ்ந்த கொண்டு இருப்பவர்கள் "" -
"மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ", 
"சாதி மதங்களை வெறுத்தவர்கள் ",
"புற சடங்குகளை ஒதுக்குபவர்கள் (மூடநம்பிக்கைகள் ) 
 என்று "சொல்லி எங்களை ஆச்சர்ய்படுத்தினார் . 
இன்றும் நோயால் வாடும் பல மக்களுக்கு மூலிகை வைத்தியத்தை இலவசமாக செய்து வருகிறார். 
 குறிப்பாக புற்று நோயால் வாடும் மக்களுக்கு சிறந்த மருத்துவத்தை அளித்து வருகிறார்.  

பிறகு என் மந்திர ஆராய்ச்சியை சொன்ன போது தமிழ் மொழியை உச்சரிக்க கற்று கொள் என்று கூறி சில மந்திரங்களை கூறினார். அவர் கூறிய மந்திரங்களும் பிருகு முனிவர் கூறிய மந்திரங்களும் ஒன்று போய் இருந்தது .

அவற்றில் சில  உங்களுக்காக..

பிருகு முனிவர் பாடல் : 41 

பாரப்பா அகரத்தை முந்தி நாட்டு
     பகடில்லை  ஆகாரம் பின்னே நாட்டே 
சேரப்பா இகாரத்தை செபிப்பாய் பின்னே 
    செயமான ஈகாரம் உகாரம் கேளு  

மாரப்பா ஊ -எ -ஏ-ஐ-ஒ -என்று 
    மகிமையுள்ள  ஔம் தனிலே முடித்துப்போடு 
காரப்பா பீசமிவை பதினொன்றாகும் 
   கண்மணியே இதைக்கடந்து மெய்யை நோக்கே ..

இதற்க்கான விளக்கத்தை நாளைய பதிவில் காணலாம் ...

என்றும்-சிவனடிமை-பாலா.