வியாழன், 16 டிசம்பர், 2010

அகத்தியர் காலம்

அகத்தியரின்   காலத்தைப்பற்றி கருவூரர்  பின்வருமாறு பாடுகிறார்.....

பாராப்பா கிரேதாயில் ரொம்ப ஆட்டம்
      பண்பாக ஆடினார் சித்தரெல்லாம்
வேரப்பா திரேதாயில்  அட்ட சித்தும்
     வேடிக்கை  வினோதங்கள்  செய்து வந்தார்
சீரப்பா துவாபரயி  லநேக  சித்தி
    செய்தவர்கள்  நல்லதொரு பேரு பெற்றார்
காரப்பா கலி யுகந்தான்  போகு மட்டுங்
    கண்மூடி  வாசி யோகங் கண்டார் பாரே ...... 

திங்கள், 8 நவம்பர், 2010

அகத்தியரின் பரிபூரணம்-400

****************
காப்பு
***************
பூரணமாய் நிறைந்தபரி பூரணத்தைப்போற்றிப்
 புகழ்பெரிய வைத்திய பூரணத்தைப்பாடக்
காரணமாய்கருவுரு வெங்குங்தானாய்க்
கண்மணியினடுவான கருணைதன்னை
யாரணமாய்முக்கோண நடுவினின்ற
அம்பரத்தையனுதுனமு மறிவாற்போற்றி      
வாரனமாமுகத்தோனை யனுதினமும்போற்றி
மகத்தானவேதியனை வணங்கினேனே.