வியாழன், 22 செப்டம்பர், 2011

மந்திரத்தைப்பற்றி ஒரு அலசல் ,

அன்புள்ள  சித்த உள்ளங்களுக்கு ,

மந்திரம் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு பொருள் கூறுவது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. இருப்பினும் என் சிற்றறிவுக்கு எட்டியதை இங்கு பகிர்கிறேன்.

என் குருநாதர் அகத்தியர் சொல்கிறார் .

  "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் . "

இந்த வரிகளை பார்க்கும் போது நமக்கு எதுக்கு வம்பு என்று மந்திரம் செபிக்காமல்  ஒதுங்கி கொள்வதும் உண்டு. ஏனென்றால் மனம் எங்கே இருக்கிறது என்பதை சொல்வதற்கு யாருமில்லை அப்படி இருந்தாலும் அந்த மனதை செம்மையாக எப்படி வைத்து கொள்வது என்பதற்கான பயிற்சி முறையை யார் தான் நமக்கு கற்றுகொடுப்பார் என்ற எண்ணமும் என் மனதில் ஏற்பட்டதுண்டு .

ஆகையால் முதலில் மனம் என்ற சொல்லை ஆராய்ந்து  பின்   மந்திரத்தை பற்றி ஆராய்ச்சி செய்யலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டேன்.  மற்றும் பொருள் தெரியாமல் கூறும் மந்திரத்தால் பயன் எதுவும் இல்லை என்ற எண்ணத்தினால் பொதுவாக சமஸ்க்ருத மொழியில் உள்ள மந்திரங்களை நான் படிப்பதும் இல்லை உபயோகிப்பதும் இல்லை .ஏனெனில் மந்திரங்களை தவறாக கூறினால் அதற்க்குண்டான விளக்கம் மாறி நாம் கூறும் மந்திரம் நமக்கே திரும்பி வந்து விடும் என்ற எண்ணமும் எனக்கு  உண்டு.( சமஸ்க்ருத மொழிக்கு எதிரிகள் நாங்கள் அல்ல .ஏனென்றால் அதன் பலன் ,சூட்சமம் ,அதனை உச்சரிக்கும்  முறை  போன்றவற்றை   எல்லாருக்கும் கிடைக்காமல் சிலர் செய்துவிட்டார்கள் )

மந்திரங்களை செபித்தால் ஏற்படும் பலன்கள்  மிக அதிகம் என்று பல நூல்களில் நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள் . அப்படி இருக்க நமது ஆலயங்களில் தினந்தோறும் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் அனைத்துவித பலன்களையும் பெற்றவர்களாக தானே இருக்கவேண்டும்.  அதற்கு மாறாக அவர்களும் நம்மை போலவே தான் வாழ்ந்து வறுமையில் உழல்கிறார்கள்.

பொதுவாக சிவன் கோவில் அர்ச்சகரை பார்த்தாலே தெரியும் அவருடைய உடலில் உள்ள எலும்புகள் தெரியும் அளவிருக்கு ஒல்லியாக இருப்பார்கள் . இதருக்கு மாறாக பெருமாள் கோவில் உள்ள அர்ச்சகரை பார்த்தால் நன்று  வாட்ட சாட்டமாக கழுத்தில் தங்க நகை தொங்கும் அளவிருக்கு வசதி படைத்தவர்களாக இருப்பார்கள்(பொதுவாக) .

இதற்க்கு காரணம் என்ன ? என்று வினவினால் பதில் சொல்வது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது.   இதற்க்கு மந்திரமும் ஒரு காரணமாக இருக்கலமா என்ற எண்ணமும் எனக்கு தோன்றுகிறது .

சிவனை கும்பிட்டால் முதலில்  ஞானம் கிடைக்கும் பின் சித்தி அதற்குபின் முக்தி கிடைக்கும். ,
பெருமாளை கும்பிட்டால் பொன்னும் பொருளும் கிடைக்கும் பின் முக்தி கிடைக்கும்.
ஆக மந்திரங்கள் மனிதனின் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எண்ணத்திருக்கு
நாம் வந்து தான் ஆகவேண்டும்.

அன்பு சித்தரை( இயேசு கிறிஸ்து ) வழிபடும் மக்களும் எல்லா நன்மைகளையும் பெற்று நன்றாக தான் வாழ்ந்து வருகிறார்கள் . நமது தமிழகத்தில் உள்ள எல்லா தேவாலயங்களிலும் அழகான தமிழ் மொழியிலே தான் திருப்பலியை அவர்கள் நடத்துகிறார்கள் .

"அல்லா' -வை வழிபடும் முகமதிய மக்களும் சீரும் சிறப்பாக தான் வாழ்ந்து வருகிறார்கள் .
அப்படி இருக்க மந்திரங்கள் எப்படி அவர்களுக்கு உதவி செய்யும்.  அவர்கள் உருது மொழியில் அல்லவா இறைவனை வழிபடுகிறார்கள் .

உலகில் கடவுள் என்றால் என்ன என்று தெரியாத மக்களும் பல நாடுகளில்(ஆப்ரிக்க) வாழ்ந்து வருகிறார்கள் . அப்படி இருக்க மந்திரங்களை நாம் எப்படி கண்டு பிடித்தோம் ,யார் கண்டு பிடித்தார்கள் என்ற விபரமும் நம்மிடம் இல்லை(அதிகாரபூர்வமாக ).

இதன் மூலம் இறைவனை அடைவதற்கு பல மொழிகளில் பல வகையான மந்திரங்கள் உள்ளது என்ற முடிவிற்கு நம்மால் வர முடிகிறது. 

நமக்கு தெரிந்த தாய் மொழியில் இறைவனை வழிப்பட்டால் போதும் என்ற எண்ணத்திற்கு  நான் வந்து விட்டேன். 

இருப்பினும் சித்தர்களின் பார்வையில் இந்த கருத்தை எடுத்து வைப்பது கொஞ்சம் கடினம் தான்.

மந்திரங்களினால் பயன் ஏதும் இல்லை என்று கூறும் சித்தர்களே பலவகையான மந்திரங்களை எழுதி அதன் பயன்களையும் நமக்கு விளக்கி உள்ளார்கள் .


அலசல் தொடரும்....

என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 21 செப்டம்பர், 2011

ஞானம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

ஞானம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? என்று பிருகு முனிவர் பின்வருமாறு கூறுகிறார் .

பாடல் : 39 

ஆச்சப்பா இதைவென்றால் ஞானங் கூடும்
    அல்லாட்டால்  தேறுதருக்கு ஏது மார்க்கங்
காச்சப்பா கோபத்தை ஞானத்தீயால்
    கண்மணியே என்போலே  யார்தான் சொல்வார்
போச்சப்பா பிறவிதான் ஞானம் நின்றால்
     பொல்லாத பிறப்பிறப்பு மழிந்து போகும்
பாச்சப்பா மனந் தன்னை மந்திரத்தில்
    பகடில்லா சித்தி பெற்றால் தெளிவுண்டாமே !

விளக்கம் :
                    காமமும், கோபமும், மிகுந்த போகமும் மனிதனை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் . காமத்தையும் ,கோபத்தையும் வென்றால் ஞானமுண்டாகும் .
ஞானம் பெற்றால் பிறப்பும் ,இறப்பும்  அகலும் . எனவே காமத்தையும் கோபத்தையும் ஞானம் என்ற தீயால் சுட்டு அழித்துவிடு என்று கூறுகிறார் .

எப்படி இந்த காமத்தையும் கோபத்தையும் மனதில் இருந்து அழிப்பது என்று நீ கேட்பாயாகில் அதற்க்கான விளக்கத்தையும் ,மந்திர முறைகளையும் உனக்கு சொல்கிறேன்.  அதன் மூலம் நீ சித்தியும் முத்தியும் அடையலாம்  என்று சீடனுக்கு கூறுவதாக கூறுகிறார்.

தாம் கூற இருக்கும் மந்திரங்களை சொல்வதினால் நமக்கு கிடைக்கும் பயன்களை பின்வருமாறு கூறுகிறார் .

சகல சித்திகளும் கிடைக்கும் என்றும் ,
சரிரத்தில் திவ்வியமான ஒருவித ஒளிவுன்டாகும் என்றும்,
கர்ம வினைகளும் ,சூனியமும் ,ஏவல் , பிசாசு ,துர்தேவதைகள் போன்றவை மந்திரத்தை செபித்த மாத்திரத்திலே விலகி ஓடும் என்றும் ,
வேதாந்த பொருளான பரம்பொருள் நம் முன்னே பிரகாசிக்கும் என்றும் கூறுகிறார்.

அவர் கூற இருக்கும் மந்திரங்களை  நாளைய பதிவில் காணலாம்( உத்தரவு இருப்பின் ).


 என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

பொய் மாந்திரிகர்களின் குணம் ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

பிருகு முனிவரின் மாந்திரிகம்  பாடல்களில்  பொய்  மாந்திரிகர்களின் குணம் ...

பொய் மாந்திரிகர்களின் இன்றைய நிலையை பின்வருமாறு கூறுகிறார்.

ஒணங்காத மாந்திரிகர் உலகில் மெத்த
     மகிதலமும் என்வசமே என்று சொல்லுவார்
கணங்களெல்லாம் எந்தனுக்கு சித்தியென்பார்
    கண்ணதில்  கண்டோமோ தெய்வமென்பார்
குணமான சக்கரத்தின் மாறல் எல்லாம்
    குறிக்கண்டு மாறவல்லோம் என்று சொல்லுவார்
இணங்காதே  கோடி கோடி யுறுவே செய்தோம்
    என்றெல்லாம் எடுத்துரைப்பார் மட்டிமாடே .


விளக்கம் : 
     நல்ல மாந்திரிகரைகாட்டிலும் பொய் மாந்திரிகர்கள் உலகில் அநேகம் உள்ளனர்கள்.
இவர்கள் கூறும் வார்த்தை ஜாலங்களால் மக்கள் மதி மயங்கி அவர்களிடம் எல்லாத்தையும் இழக்கிறார்கள் .

ஈரேழு புவனங்களும் என் வசம் என்றும், சகல பூதகணங்களும்  என்வசம் என்றும் கூறுவார்.
அணைத்து பூதங்களுக்கும் தலைவனாக உள்ள தெய்வங்களை கண்டு அவர்களிடம் உரையாடினோம் என்றும் கூறுவார்.  அது மட்டுமல்லாமல் சூரிய ,சந்திரிய ரகசியங்களைய அறிவோம் என்றும், பல கோடி முறை மந்திரங்களை உச்சாடனம் செய்து சக்தி வைத்துள்ளோம்
என்றும் கூறுவார்.


தொடரும்...


என்றும்-சிவனடிமை-பாலா.

புதன், 7 செப்டம்பர், 2011

மதிப்பிற்குரிய ஐயா கணபதி ஸ்தபதி சிவனடி சேர்தல் ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

 கணபதி ஸ்தபதி


பிரபல சிற்பக்கலை நிபுணர் மதிப்பிற்குரிய ஐயா கணபதி ஸ்தபதி அவர்கள் சிவனடி சேர்ந்ததை
மிகுந்த  ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.

அவர் கட்டிய கோவில்கள் பல , அவர் வாங்கிய பட்டங்கள் பல (பத்மபூஷன் உள்பட)

அவரின் கைப்பாட்டில் விளைந்தவைகளில் சில இங்கே தரப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி- திருவள்ளுவர் சிலை .
தஞ்சாவூர் -தமிழ் பல்கலைகழகம் .
சென்னை -திருவள்ளுவர் கோட்டம் .
அமெரிக்கா -இலியானாஸ் -ஸ்ரீ ராமர் கோவில் .
பிஜி தீவுகள் -ஸ்ரீ முருகன் கோவில்.
ஹவாய் தீவுகள் -இறைவன் கோவில் .
பூம்புகார் - மாதவி சிலை(சிலப்பதிகாரம் )

இன்னும் பல இடங்கள் உள்ளன ..

English:

The following source taken from the http://www.aumscience.com/content/shilpi_guru.html.

V. Ganapati Sthapati is a Sthapati head of the "College of Architecture & Sculpture" in the Vastu Shastra tradition ascribed to the mythical sage Mamuni Mayan.
He was born in 1927 to sculptor Sri Vaidyanatha Sthapati and Smt. Velammal at Pillayarpatti a village near Karaikudi, Tamil Nadu, India in a Vishwabrahmin family (a Hindu hereditary caste of artisans and architects). His family tradition claims descent from the architects who created the Brihadeeswara Temple of Tanjore TN, India.
Sthapati attended Dr. Alagappa Chettiar College, Karaikudi and graduated in mathematics. After his graduation he became a Sthapati (Hindu traditional architect) at Palani Murugan Temple, Palani, TN, India. He resigned the same after the demise of his father who served as principal (1957 to 1960) of ‘The School of Architecture and Sculpture’ at Mamallapuram. He succeeded his father as the Principal of the Government College of Architecture and Sculpture, TN, India.
From the 1980s, Sthapati campaigned to restore and elevate the status of traditional Hindu architecture in modern Indian society by affiliating courses to the University of Madras and offering degree courses, bringing about a revival of Vastu Shastra.
After retirement from government service, he established "Vaastu Vedic Trust" and "Vaastu Vedic Research Foundation" aimed at research, development and globalization of Vaastu Shastra. He is also the head of the professional guild named "V. Ganapati Sthapati & Associates".
Sthapati served as architect for several buildings and sculptures, including the following:
  • Sculpture of Tamil poet and saint Thiruvalluvar - Thiruvalluvar Statue at the southern tip of India at Kanyakumari, TN, India (measuring 133’- 40.5 m in elevation).
  • Design and Construction of huge sized University buildings including the Administrative block and library for Tamil University in Tanjore.
  • Design and Construction of Valluvar Kottam in Chennai, TN, India.
  • The Rajagopuram of Sri Ramar Temple and Sri Ganesh Shiva Durga Temple at The Hindu Temple of Greater Chicago complex Lemont, Illinois, USA[
  • Sri Murugan Temple, Nadi-Fiji islands.
  • The San Marga Iraivan Temple, Kauai, Hawaii.
  • Granite sculpture of the Madhavi - heroine of the Tamil epic Silappathikaram, erected in an Art Gallery in Poompuhar, Chennai, TN, India.
  • Projects in India and other countries.
Among these the palatial buildings of library and administrative block for Tamil University of Tanjore and the Muthiah Mandram in Madurai speak of his capacity for designing and executing works of stupendous nature. Of particular interest is his monumental vaastu the sculpture of Tamil poet and saint Thiruvalluvar - Thiruvalluvar Statue at the southern tip of India at Kanyakumari, TN, measuring 133 feet (40.5 m) in elevation. This colossal marvel has taken him to the pinnacle of his life’s achievement as a traditional architect and builder and commendations and awards have reached him from around the world for this achievement: a poetic image that will be with us for thousands of years.
He has authored a number of books on the science and technology of Vastu Shastra and has conducted numerous seminars with professionals in a generous effort to make this knowledge available to the world. He has established the International Institute of Mayonic Science and Technology, which conducts workshops and discourses all over the world. Some of the notable books he has authored include: Iconometry, Temples of Space Science, The Building Architecture of Sthapatya Veda, and Commentary on Mayan’s Aintiram.
Sthapati has earned a number of titles and awards including Padma Bhushan[8], an Honorary Fellowship by the Indian Institute of Architects, the National award for Master Craftsmanship by the President of India, the title of "Shilpi Guru of India" also by the President and a Doctorate Degree conferred by the Maharishi Mahesh Yogi Vedic University. - source http://en.wikipedia.org/wiki/Dr._V._Ganapati_Sthapati


என்றும்-சிவனடிமை-பாலா.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

இமயமலை யாத்திரையின் முதல் நாள் அனுபவம் தொடர்ச்சி ....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

 நேற்றைய தொடர்ச்சி ,
     சரியாக மாலை 6 மணிக்கு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தபோது ,எதுக்கும் செல்வராஜ் அன்பர்க்கு தொடர்ப்பு கொண்டு பார்ப்போம் என்று எண்ணி அவரை தொடர்பு கொண்டேன்.

அவர் கூலாக ஒரு பதில் சொன்னார் ,தம்பி பொறுமையாக வாங்க நம்ம புரோக்ராம் மாற்றம் அடைந்துள்ளது என்று சொன்னார்.
 எனக்கு ஒன்றும் புரியவில்லை .  என்ன சொல்றிங்க என்ற கேட்டபோது 
"காத்கோடம்" போற வழியில பாலம் ஒன்று உடைஞ்சி போச்சி , அதனால நாம் ஹரித்வார் போயிட்டு அப்புறமா பாபாஜி குகைக்கு போகலாம் என்று சொன்னார் .

எங்களுடைய ரயில் டிக்கெட் வைட்டிங் லிஸ்ட் 5  ஆக இருந்தது  . எனக்கு ஒரு சந்தேகம் எப்படியும் நம்ம டிக்கெட் உறுதியாகி விடும், கேன்ஸல் பண்ணினாலும் பணம் ஒன்னும் கிடைக்காது என்று நினைத்துகொண்டு , என் நண்பனுக்கு போன் பண்ணி எங்களுடைய டிக்கெட்டை கேன்சல் பண்ண சொன்னோம். அவனும் உடனே செய்ததால் எங்களுக்கு முழு பணமும் கிடைத்து. இல்லையென்றால் ஒரு சிறிய தொகையை நாங்கள் இழக்க வேண்டியதாக இருக்கும்.  பாபாஜியின் அருளினால் இந்த ஒரு நிகழ்வு நடந்தது.

நாங்கள் டெல்லியில் இறங்கி சரியாக 10 :30 மணிக்கு பழைய ரயில் நிலையத்திருக்கு சென்று எங்கள் குழுவினரை சந்தித்து எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் ...

எதுவும் நம் கையில் இல்லை ,
டிக்கெட் கன்பார்ம் ஆகனும் என்று வேண்டிய எனது மனம் இந்த நிகழ்வுக்கு பிறகு எப்படியாவது  டிக்கெட்டை கேன்ஸல்  பண்ணனும் என்று வேண்டி கொண்டதை நினைத்தை பார்க்கும்போது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

விதிப்படி பயணம் என்பது எவ்வளவு ஆழ்ந்த கருத்து என்பதை இதன்மூலம்  நான் உணர்ந்தேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.

திங்கள், 5 செப்டம்பர், 2011

இமயமலை யாத்திரையின் முதல் நாள் அனுபவம் .....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

  இமயமலையில் நடைபெற்ற அனுபவங்களை தொகுத்து எழுத நினைக்கும்போதெல்லாம் ஏதோ ஒருமாதிரியாக இருக்கிறது . 

எங்களுடைய யாத்திரை பல வித மாறுதலுக்கு உட்பட்டு இருந்தது (கடைசி நேரம்வரையில்)  . எங்களுடைய குழுவின் திட்டம் முதலில்  ஹரித்வார் சென்றுவிட்டு பிறகு பாபாஜி குகைக்கு செல்வதாக மட்டும் தான்இருந்தது.

செல்வராஜ் என்ற ஆன்மிக நண்பரின் ஆலோசனையின் பெயரில் ,
முதலில்  ரயில் மூலம் "காத்கோடம்" சென்றுவிட்டு பின் "நைனிட்டால்" சுற்றி பார்த்துவிட்டு பிறகு பாபாஜி குகைக்கு செல்லலாம் வரும்போது  ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷை
 சுற்றிப்பார்க்கலாம் என்று கூறினார்.  இதன் மூலம் நமக்கு இரண்டு நாட்கள் மிச்சம், அந்த இரண்டுநாட்களில் நாம் பத்ரிநாத் சென்று தரிசனம் செய்து வரலாம் என்று கூறினார் .  
எல்லார்க்கும் ஒரே சந்தோசம் ஏனெனில் ஒரே கல்லில் இரண்டு மாங்கனிகள் போல  இருந்தது .


ஆனால் இதில் ஒரு சின்ன பிரச்சனை என்னவென்றால்  நாங்கள் பதிவு  செய்த விமானம் இரவு 9 :30   மணிக்கு தான் டெல்லி வந்தடையும் . ராணிக்கெட் எக்ஸ்பிரஸ்   ரயிலோ இரவு 10 :40 மணிக்கு பழைய டெல்லியில் இருந்து புறப்பட்டுவிடும் .  இது சாத்தியமா என்று எங்களுக்கு தெரியவில்லை இருப்பினும் பாபாஜியின் மேல் பாரத்தை போட்டுவிட்டு நாங்கள் சரி என்று ஒப்புகொண்டோம் . பின் எங்களுக்கு ரயில் டிக்கெட் எடுத்து தருவதாக சொல்லி எங்கள் விபரங்களை வாங்கிக்கொண்டார் .

நான், என் மனைவி மற்றும் என் குழந்தை  மற்றும் என் நண்பர்கள் இரண்டு பேர் சேர்த்து மொத்தம் ஐந்து நபர்கள் பிரயாணம் பண்ணவேண்டியதாக இருந்தது.
நாங்கள் புறப்படவேண்டிய நாள் 19 ந் தேதி வெள்ளிகிழமை ஆகையால் புதன் கிழமை தக்கால் மூலம் டிக்கெட் எடுத்து தருவதாக சொன்னவரிடம் இருந்து எந்தவொரு பதிலும் வியாழகிழமை வரை வரவில்லை.

எனக்கு ஒரே சந்தேகம் இன்னும் எந்தவொரு பதிலும் செல்வராஜ் அன்பரிடம் வரவில்லையென்று . பிறகு அவரை தொடர்பு கொண்டபோது "வைட்டிங் லிஸ்ட் " தான் இருந்தது அதனால் நான் புக்கிங் பண்ணலப்பா என்று கூலாக ஒரு பதில் இருந்தது .
என்னடா சோதனை என்று மனம் நொந்து நான் தக்கால் மூலம் வியாழக்கிழமை அன்று எங்கள் குழுவினர் எல்லாருக்கும் சேர்த்து டிக்கெட்  புக்கிங் பண்ணிவிட்டேன்.  அப்போது வைட்டிங் லிஸ்ட் 80 ஆக இருந்தது. 

வெள்ளிகிழமை அன்று காலை வைட்டிங் லிஸ்ட் 50 ஆக இருந்தது . எனக்கு ஒரே சந்தோசம் எப்படியும் நமக்கு டிக்கெட் உறுதியாகிவிடும் என்று. நாங்கள் விமான நிலையத்திருக்கு புறப்படும்போது வைட்டிங் லிஸ்ட்  15 ஆக இருந்தது. எப்படியோ நமக்கு டிக்கெட் உறுதியாகிவிடும் அதற்க்கு பின் எப்படி நாம் ராணிகேட் எக்ஸ்பிரஸ்-யை பிடிப்பது என்ற எண்ணம் மனதில் அடிக்கடி தோன்ற ஆரம்பித்து விட்டது .  ஏனெனில் டெல்லி ஏர்போர்ட்க்கும் பழைய டெல்லி ரயில் நிலையத்திருக்கும் குறைந்தது ஒரு மணிநேரம்மாவது ஆகும் என்று எல்லாரும் கூறினார்கள் அதே வேலை விமானம் இறங்குவதற்கு கொஞ்சம் நேரமானாலும் நம்மால் அந்த ரயில புடிக்க முடியாது என்றும்  கூறினார்கள் .

ஓம் கிரியா பாபாஜி நம அஉம்  என்று மனதில் உச்சரித்து விட்டு பயணத்தை வீட்டில் இருந்து தொடங்க ஆரம்பித்தோம்.

என்ன நடந்தது என்று நாளைய பதிவில் காணலாம்.

என்றும்-சிவனடிமை-பாலா.