புதன், 21 மார்ச், 2012

நீரழிவு நோய்க்கு இயற்கை மருத்துவம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

நீரழிவு நோய்க்கு இயற்கை மருத்துவம்...
அன்பர் குருசாமியின் பதில் கண்டு மிக மகிழ்வுண்டேன் . 

மூலைக்கு மூலை அக்குபஞ்சர் மருத்துவர்கள் பெருகிவிட்டார்கள்  என்பது உண்மை தான் . இந்த மருத்துவத்தை நானும் தற்சமயம் தான் பயின்று வருகிறேன்.  எல்லாரும் கற்று கொள்ள கூடிய எளிமையான மருத்துவம் தான் . நீங்களும் பயின்று மருந்தில்லா மருத்துவ துறையில் மக்களுக்காக பணியாற்றுங்கள் .  உடலில் ஓடும் சக்தி ஓட்டத்தை கொண்டு நோயை குணபடுத்தும் அருமையான மருத்துவம்  தான் இது.

உடலில் உள்ள மண்ணீரல் உறுப்பினை நன்கு வைத்து கொண்டால் நமக்கு எந்தவொரு பாதிப்பும் வராது .  இன்சுலின் இல்லாமலும் நமது உடல் இயங்கு வண்ணம் இறைவன் அற்புதமாக படைத்துள்ளான் .

என்று மனிதன் உடல் உழைப்பினை மறந்தானோ அன்றோ நோய்களுக்கு
அடிமையாகிவிட்டான் . இன்சுலின் தேவையை குறைத்து கொண்டு மாற்று முறையில் வாழ கற்றுகொண்டால் அவனுக்கு நிச்சயம் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

எளிமையான முறையில் நாம் இயற்கையோடு ஒத்து வாழ கற்றுக்கொண்டால் நோயினை கண்டு பயப்பட தேவையில்லை .

நோய் என்பது மனிதனுக்கு இயற்கை உணர்த்தும்   ஒரு அறிகுறி தான் . நமது உணவு முறையில் மாற்றம் ஏற்படும் போது தான் நோய் வருகிறது.

உண்ணும் உணவினை கவனித்தால் போதும் நோயின்றி வாழலாம் .

உணவே மருந்து . மருந்தே உணவு ...

தினந்தோறும் ஒரு கைப்பிடி முருங்கை கீரையை  சாப்பிடுவதற்கு
முன்பு சாப்பிடுங்கள்.


தினந்தோறும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிடுங்கள் .

தினந்தோறும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை சாப்பிடுவதற்கு
முன்பு சாப்பிடுங்கள்.

முடிந்த அளவு நடைப்பயற்சியை மேற்கொள்ளுங்கள் .

நீரழிவு நோயை முற்றிலும் நம்மால் ஒழிக்க முடியும்.

நாளைய பதிவில் எந்த வகையான உணவுகளை சேர்த்து கொள்ள
வேண்டும்  என கூறுகிறேன்.


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

1 கருத்து: