திங்கள், 21 நவம்பர், 2011

கணபதி தாசர் எழுதிய நெஞ்சறி விளக்கம்....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

கணபதி தாசர் எழுதிய நெஞ்சறி  விளக்கம்....

இந்த சித்தரைப்பற்றிய வாழ்க்கை விபரம் ஒன்றும் எனக்கு தெரியாது . இருப்பினும் இவர் நாகை நாதரின் மீது அளவு கடந்த பக்தி கொண்டுள்ளதாக பாடல்இயற்றப்பட்டுள்ளது . இதன் மூலம் இவர் நாகை  அருகே வசித்து இருக்கலாம் என நான் கருதுகிறேன் .  இவரைப்பற்றிய விபரம் எவருக்காவது தெரிந்து இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் .

இவர் எழுதிய நெஞ்சறி விளக்கம் 100  பாடல்களை படிப்பதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பின்வரும் பாடல் மூலம் நம்மால் காணமுடிகிறது.

நூற்பயன் :

கதிதரும்மூலா  தாரக் கணபதி தாசன் சொன்ன
நிதிமணி மாலை யான நெஞ்சறி விளக்கம் நூறும்
துதிசெயும்  அறிவோர் ஞான சோதியின் வடிவமாக
மதியணி நாகை நாதர் மலர்ப்பாதம் பெற்று வாழ்வார் .

நித்தியப் பொருள தான நெஞ்சறி விளக்கம் நூறும்
பத்தியாப் மனத்தில் எண்ணிப் படித்ததன் பயன் காண்போர்கள்
முத்தி மெய்ஞானம் பெற்று மூவர்க்கும் முதல்வராகிச்
சத்தியுஞ் சிவமுந் தோன்றுந் தற்பர மதனுட் சார்வார்

கனகமார் மணிசேர் மூல கணபதி தாசனாக
நினைவினா லறிகட்செப்பும் நெஞ்சறி விளக்கம் நூறும்
வினவியே படிப்போர் கேட்போர் வினையெல்லாம்  அகன்று மெய்யுற்
பணமெனும்   மோட்ச நாலாம் பதம்பெற்றுப் பதத்துள் வாழ்வார் .


வரும் நாட்களில் அவர் இயற்றிய நூறு பாடல்களில் சிலவற்றை நாம் காணலாம்.

  http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

2 கருத்துகள்:

  1. அற்புதமான பாடல். தொடருங்கள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு மிக்க நன்றி..


    மேலும் தொடருங்கள்..

    பதிலளிநீக்கு