புதன், 25 ஜனவரி, 2012

பால் கறத்தல்-1

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

உலகில் உள்ள அனைத்து பாலுட்டிகளும் பாலை குடித்துதான் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறது .  நம்முடைய வாழ்க்கை
தோன்றுவதில் இருந்து மறையும் வரை உள்ள அனுபவங்களை நினைவு கூர்ந்து நம்மை கொஞ்சம் மாற்றி கொண்டு வாழ்ந்தால் எவ்வித இல்லல்களும் இல்லாமல் நம்மால் வாழ முடியும் .

இவ்வுலகில் நாம் பிறந்தவுடன் நம்மை ஈன்ற தாயானவள் தம்முடைய ரத்தத்தையே பாலாக மாற்றி நமக்கு உணவினை தருகிறாள் . நாம் பிறந்தவுடன் நமக்கு எதுவும் தெரியாது , ஏறக்குறைய
முப்பது நாட்களுக்கு பிறகு தான் நமக்கு கண் பார்வை தெரிகிறது. பிறகு தான் தாயானவள் எல்லாரையும் நமக்கு அறிமுகப் படுத்துவாள். 

குழந்தை பருவம் நமக்கு வாழ்வில் இரண்டு முறை வரும் . முதல் பருவத்தில் நமக்கு எதுவும் தெரியாது . இரண்டாவது முறை வரும்போது நாம் சுதாரித்து கொண்டு நம்மை கொஞ்சம் தயார் படுத்தி கொண்டால் நமக்கு சாவே கிடையாது .

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று -என்று கூறிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது . குழந்தை போன்ற மனத்தை நாம் பெற முயற்சி செய்ய வேண்டும் .


தாயானவள் தம்முடைய ரத்தத்தில் இருந்து பாலினை உற்பத்தி செய்து நமக்கு தந்து இந்த உலகில் வாழ இடம்  தருகிறாள் .

குருவானவர் நம்முடைய ரத்தத்தில் இருந்து பாலினை உற்பத்தி செய்து
நமக்கு மரணமில்லா பெருவாழ்வை பெற்று தருகிறார்.  இவ்வுலகின் பிரபஞ்ச ரகசியங்களையும் மனிதர்களின் வாழ்க்கை நெறியையும் தெய்வங்களின் தத்துவங்களையும் நமக்கு விளக்கி ஞானம் என்ற பாலினை நமக்கு தருகிறார்.


என்ன ஒற்றுமை பாருங்கள்...

எப்படி நம்மால் பாலினை உற்பத்தி செய்ய முடியும் ? முடியும் வரை முயற்சி செய்ய வேண்டும்.


விளக்கம் தொடரும் ....

என்றும்-சிவனடிமை-பாலா.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக