திங்கள், 23 ஜனவரி, 2012

இடைக்காட்டு சித்தரின் பால் கறத்தல்..

அன்புள்ள  சித்த உள்ளங்களுக்கு ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். சித்தர்களைப்பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் கூட நமக்கு அவர்களுடைய அனுமதி தேவைப்படுகிறது.

என்னுடைய பணியின் சுமை மற்றும் என்னுடைய மக்கள் நலம் இல்லாமை போன்ற காரணங்களால் என்னால் எதுவும் எழுதமுடியவில்லை .
எழுதாத ஒவ்வொரு நாளும் வீண் என்றே என்னும் எண்ணம் உடையவன் நான் . இருப்பினும் அவர்களுடைய அனுமதியின்றி எதுவும் நடக்காது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது .

வரும் வாரங்களில் இடைக்காட்டு சித்தரின் பாடலில் இருந்து பால் கறத்தல் என்ற பகுதியில் வரும்  சில  பாடல்களை நாம் இங்கு காணலாம்.

பால் கறத்தல் :

இந்த உலகத்தில் நாம் இறக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் .   நம்மால் இதை செய்து காட்ட முடியுமா ? என்று நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது . ஆனால் இதையே வெற்றிகரமாக செய்து காட்டியவர்கள் தான் நம்முடைய சித்தர்கள் . 

பிறப்பு என்று ஒன்று இருந்தால்
இறப்பு என்பதும் உண்டு -என்பதில் மாற்று கருத்து கிடையாது . இதுவே இயற்கையின் நியதி மற்றும் விதியும் கூட. ஆனால் நம்முடைய சித்தர்கள் இயற்கையின் விதியையும் கூட மாற்ற சக்தி மிக்கவர்கள் என்பதில் ஐயம் இல்லை .

அவர்கள் கூறும் கருத்துகளை நன்கு உணர்ந்து அவர்களை பூசித்து வந்தாலே போதும் மீதியை அவர்கள் பார்த்து கொள்வார்கள் .

அவர்கள் கூறும் கருத்துகள் எல்லாம் ஒரே மாதிரியானவை . எல்லா சித்தர்களும் கூறும் கருத்துகள் ஒன்றே .

உன்னை உணர் என்பது தான்.

வரும் நாட்களில் சில பாடல்களை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.

1 கருத்து:

  1. //எல்லா சித்தர்களும் கூறும் கருத்துகள் ஒன்றே .

    உன்னை உணர் என்பது தான்.
    //

    ஒரு வாசகமானாலும் திருவாசகமாக சொல்லி இருக்கிறீர்கள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு