செவ்வாய், 24 ஜனவரி, 2012

இடைக்காட்டு சித்தரின் பால் கறத்தல்: 107 to 112

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

இடைக்காட்டு சித்தரின் பால் கறத்தல்:

சாவா திருந்திடப் பால்கற-சிரம்
  தன்னி லிருந்திடும் பால்கற
 வேவா திருந்திடப் பால்கற -வெறும்
  வெட்ட வெளிக்குள்ளே பால்கற .

தோயா திருந்திடும் பால்கற -முனைத்
தொல்லை வினையறப் பால்கற
வாயா லுமிழ்ந்துடும் பால்கற -வெறும்
வயிறார வுண்டிடப் பால்கற .

நாறா திருந்திடும் பால்கற- நெடு
 நாளு மிருந்திடப் பால்கற
மாறா தொழுகிடும் பால்கற - தலை
மண்டையில் வளரும் பால்கற

உலகம் வெறுத்திடும் பால்கற -மிக்க
ஒக்காள மாகிய பால்கற
கலசத்தினுள் விழப்  பால்கற -நிறை
கண்டத்தினுள் விழப் பால்கற

ஏப்பம் விடாமலே பால்கற -வரும் 
 ஏமன் விலக்கவே பால்கற
தீப்பொறி யோய்ந்திடப் பால்கற -பர
சிவத்துடன் சாரவே பால்கற

அண்ணாவின் மேல்வரும் பால்கற -பேர்
அண்டத்தி லூரிடும் பால்கற
விண்ணாட்டி லில்லாத பால்கற -தொல்லை
வேதனை கெடவே பால்கற .

பால் கறக்க எல்லாரும் தயாரா இருக்கிங்களா ?

விளக்கம் வரும் நாட்களில் தொடரும் ...

என்றும்-சிவனடிமை-பாலா.

2 கருத்துகள்: