திங்கள், 19 மார்ச், 2012

பரங்கிப்பேட்டையில் பாபாஜியின் அருகில்....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

பரங்கிப்பேட்டையில் பாபாஜியின் அருகில்....

பலநாட்களாக என்னால் எந்தவொரு பதிப்பினையும் பகிர்வு செய்ய முடியவில்லை .

இரண்டு வாரங்களுக்கு முன்னால் நாங்கள் பாபாஜி அவதரித்த புண்ணிய பூமிக்கு சென்று இருந்தோம்.   அங்கு தரிசனம் முடிந்த பிறகு ,கொஞ்ச நேரம் தியான செய்து விட்டு போகலாம் என்று எண்ணம் கொண்டு இருந்தேன்.  நானும் என் நண்பனும் தியானம் செய்ய ஆரம்பித்தோம். ஆனால் அவனுக்கு தியானம் செய்ய தெரியாது , கொஞ்ச நேரம் கண்ணை மூடி கொண்டு பாபாஜியின் நாமத்தை சொல்லி கொண்டு இரு என்று சொல்லிவிட்டு தியானத்தை ஆரம்பித்தோம்.

கொஞ்ச நேரம் கழித்து ,எனக்கு அருகே யாரோ ஒருவர் உட்கார்ந்து கொண்டு வாசியை ஏற்றி கொண்டு இருந்தார் . என்னுடைய எண்ணம் எல்லாம் என் நண்பனின் மேல் இருந்தது .  ஏறக்குறைய 20  நிமிடங்கள் கழித்து நான் எனது கண்களை திறந்து அருகில் இருந்த என் நண்பனை பார்த்தேன் . அங்கு யாருமே இல்லை என்னை தவிர .
 ஒருவேளை இப்போதுதான் எழுந்திருந்து போய் இருப்பான் என்று எண்ணம் கொண்டு வெளியே வந்தேன் . 

ஆனால் என் நண்பனோ, வெளியே  என் மகனிடம் விளையாடி கொண்டு இருந்தான் . உடனே எனக்கு ஒரு எண்ணம் வந்தது .  என் நண்பனிடம்
எப்பொழுது தியானத்தை விட்டு வெளியே வந்தாய் என்று கேட்டேன்.

அவனோ நான் ஒரு 3  நிமிடங்கள் தான் உட்கார்ந்து இருந்தேன் . அதற்க்கு அப்புறமா என்னால் உட்கார முடியல என்று கூறினான்.

எனக்கு ஒரு சந்தோசம் , ஆச்சர்யம் ,பாபாஜியின் அருகில் இருந்து தியானம் பண்ணியதை நினைத்து கொண்டு இருந்ததை .


மறக்க முடியாத நினைவுகளோடு .....பாபாஜியின் துணையோடு ....


 
நீரழிவு நோயின் தன்மையையும் அதனை குணமாக்கும் மருத்துவத்தை   அறியும் முயற்சியில் ஈடுபட்டு அதில் ஓரளவு  வெற்றிபெற்றுள்ளேன். அதற்க்கான மருத்துவ செலவு ஒன்றும் இல்லை ,நீங்கள் உங்களைப்பற்றி நன்றாக தெரிந்து கொண்டு இயற்க்கை வைத்தியத்தின் மூலம் உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்.

வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளோடு வாழவேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு கிடையாது .


அதைப்பற்றிய விபரங்கள் வரும் நாட்களில் காணலாம் .


 http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

1 கருத்து:

  1. பாபாஜியின் ஆசி தங்களுக்கு முழுமையாகக் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்..

    என்னைப் போன்ற சில சர்க்கரை வியாதிக்காரர்கள் தங்கள் இயற்கை வைத்திய முறைக்காக காத்திருக்கிறோம்.

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு