திங்கள், 17 அக்டோபர், 2011

தமிழ் மந்திரங்களை உச்சரிக்கும் முறை ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

மந்திரத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய என்னால் பதிவுலகத்தை பற்றிய 
சிந்தனை கூட வரமுடியாத  அளவுக்கு ஆகிவிட்டது. 

தமிழ் மந்திரங்களை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியபோது  எமது வர்மானிய  நண்பர் ஒருவரை சந்திக்க நேரிட்டது . அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழ் மந்திரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைத்து  கொண்டேன். பிறகு உரையாடி கொண்டு இருக்கும் போது தமிழில் உள்ள மந்திரங்கள் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்று வினவினேன் . 

அவர் சித்தர்கள் காட்டிய வழியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் .  அவர் சிரித்து கொண்டு தமிழ் மொழியை  தெரிந்து கொண்டவனுக்கு இறப்பு என்பதே கிடையாது என்று கூறினார்.  இதை என்னால் நம்ப முடியவில்லை . இருப்பினும்   நான் அனுமார் மந்திரம் ஒன்றினை ஆராய்ச்சி செய்து கொண்டு இருப்பதாக அவரிடம்  கூறினேன்.   என்னை பொறுத்த வரை அவர்க்கு எந்த மந்திரமும் தெரியாது என்ற எண்ணத்தில் கூறினேன் . அவர் என்னை பார்த்து அந்த மந்திரத்தை கூறும்படி சொன்னார் . 

நான் அந்த மந்திரத்தை சொல்ல  ஆரம்பித்தேன் அவ்வளவு தான் அதற்குள் அவரிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டு  பட பட வென்று  அந்த மந்திரத்தை கூறிவிட்டு அதனை உச்சரிக்கு்ம் முறையையும் அதன் பலனையும் கூறினார் .
என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை . 

ஒரு வாரம் காலமாக நான்  அதைப்பற்றி சிந்தனையில் இருந்து கடைசியில் ஒரு கிறித்துவர்  மூலமாக அதன்  உட்கருத்தை தெரிந்து கொண்ட போது சித்தர்களின் வல்லமையை நினைக்கவே ஆச்சர்யமாக இருந்தது. 

அவர் சித்தர்களை பற்றி கூறும்போது
 " மனிதர்களுக்காக என்றும் வாழ்ந்த கொண்டு இருப்பவர்கள் "" -
"மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ", 
"சாதி மதங்களை வெறுத்தவர்கள் ",
"புற சடங்குகளை ஒதுக்குபவர்கள் (மூடநம்பிக்கைகள் ) 
 என்று "சொல்லி எங்களை ஆச்சர்ய்படுத்தினார் . 
இன்றும் நோயால் வாடும் பல மக்களுக்கு மூலிகை வைத்தியத்தை இலவசமாக செய்து வருகிறார். 
 குறிப்பாக புற்று நோயால் வாடும் மக்களுக்கு சிறந்த மருத்துவத்தை அளித்து வருகிறார்.  

பிறகு என் மந்திர ஆராய்ச்சியை சொன்ன போது தமிழ் மொழியை உச்சரிக்க கற்று கொள் என்று கூறி சில மந்திரங்களை கூறினார். அவர் கூறிய மந்திரங்களும் பிருகு முனிவர் கூறிய மந்திரங்களும் ஒன்று போய் இருந்தது .

அவற்றில் சில  உங்களுக்காக..

பிருகு முனிவர் பாடல் : 41 

பாரப்பா அகரத்தை முந்தி நாட்டு
     பகடில்லை  ஆகாரம் பின்னே நாட்டே 
சேரப்பா இகாரத்தை செபிப்பாய் பின்னே 
    செயமான ஈகாரம் உகாரம் கேளு  

மாரப்பா ஊ -எ -ஏ-ஐ-ஒ -என்று 
    மகிமையுள்ள  ஔம் தனிலே முடித்துப்போடு 
காரப்பா பீசமிவை பதினொன்றாகும் 
   கண்மணியே இதைக்கடந்து மெய்யை நோக்கே ..

இதற்க்கான விளக்கத்தை நாளைய பதிவில் காணலாம் ...

என்றும்-சிவனடிமை-பாலா.

1 கருத்து:

  1. நல்ல விசயத்தை அலச ஆரம்பித்திருக்கிறீர்கள்.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு