வியாழன், 29 டிசம்பர், 2011

நெஞ்சறி விளக்கம்-சிவன் உறையும் இடம்

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

மதிப்பிற்குரிய ஐயா சங்கர் குருசாமி கேட்டுதர்க்கிணங்க எனக்கு தெரிந்த
விளக்கத்தை இங்கே தருகிறேன்.

முதல் பாடலில் நாடு,நகரம்,  வீடு ,நல்ல வாழ்க்கை ,இல்லாள் , மைந்தர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் நம்முடன் இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கின்றாயே ,இந்த கூடும் ஒரு நாள் அழிந்து போகுமே , இப்படி அழிந்து போகும் கூட்டினை வைத்து கொண்டால் பிறவிகள் பல எடுக்க வேண்டி இருக்குமோ கூறு நெஞ்சே என்று கேட்கிறார் . இந்த கூட்டினை அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?


இரண்டாவது பாடலில் கூறுவது , என்னதான் படித்தாலும் ,எத்தனை ஏடுகள் படித்தாலும் எத்தனை  நூல்கள் படித்தாலும் ஒன்றும் புண்ணியம் இல்லை என கூறுகிறார்.  இன்று நிறைய ஏடுகள் தியானத்தை பற்றி நமக்கு கிடைக்கிறது ,ஆனால் ஏடுகளை படித்துவிட்டு நாம் தியானத்தை தொடர்ந்தால் பல விளைவுகளை தான் சந்திக்க வேண்டீருக்கும் . எனவே குருவினை கொண்டு இது போன்ற
பயிற்சிகளை கற்று கொள்ளவேண்டும் .

முற்காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி மனிதன் தனது இறுதி காலத்தினை கழிக்க கானகத்தை தான் தேர்வு செய்து கொள்கிறான் .ஏனெனில் அங்கு தான் மன  நிம்மதி கிடைக்கும் என நினைக்கிறான். பல சித்திகளை பெறுவதற்காக பல மாதங்களாக காட்டில்
தவம் செய்து கொண்டு மாண்டு போனவர்கள் எண்ணிலா கோடி ஆகும். இதுவும் நமக்கு தேவை இல்லை . இங்கு கானல் நீரினை உண்மையான நீர் என நினைத்துகொண்டு நாம் அலைவதை குறிப்பிடுகிறார். அதுபோல நாட்டிலே தெய்வம் இங்கு இருக்கிறது அங்கு இருக்கிறது என்று மக்கள் அலைவதை பார்த்து தெய்வம் என்பது நமது கூட்டினுள் தான் இருக்கிறது என்று தெளிவாக கூறுகிறார்.

இது உண்மையும் கூட தான் , நமது ஜீவன் நம்மை விட்டு போனால் நாம் சடம் ஆவோம் .இந்த உடலையும் உயிரையும் ஆட்டுவிப்பவனே இறைவன் ஆவான் .


மூன்றாம் பாடலில் நாம் எவ்வாறு இந்த ஆக்கையை அழியாமல் பாதுகாக்க முடியும் என்று கூறுகிறார்  . இதற்க்கு முதலில் நமக்கு ஞானம் கிடைக்கவேண்டும்,  ஞானம் கிடைக்க நல்ல குரு வேண்டும் , நல்ல குரு கிடைத்தால் வாசி போன்ற பயிற்சிகளை நமக்கு கற்று கொடுத்து உண்மையான கயிலையை நமக்கு காட்டுவார்கள் , அவ்வாறு கண்ட கயிலையில் குண்டலினி மூலம் தீபத்தை நெற்றியின் புருவ மையத்தில் எப்படி ஏற்றுவது என்று கற்று கொடுப்பார்கள் . அவ்வாறு ஏற்றிய தீபத்தின் மூலம் உண்மையான சிவலிங்கத்தை நமக்கு காட்டுவார்கள் .

நமது உயிரின் வடிவம் சிவலிங்கம் ஆகும். இதை தான் நமது சித்தர்கள்
எல்லா கோவிலிலும் நாகலிங்கத்தை பிரதிஸ்டை பண்ணி இருப்பார்கள் .
குண்டலினி மூலம் நமது ஜீவனை நம்மால் அடைய முடியும்.

இது எமக்கு தெரிந்த கருத்துகள் .


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

2 கருத்துகள்:

  1. மிக சிறப்பான விளக்கங்கள். சில கடினமான வார்த்தைகள் உடைய பாடல்களுக்கும், சூட்சுமமான விளக்கம் தேவைப்படும் பாடல்களுக்கும் தாங்கள் விளக்கமுடன் எழுதினால் சிறப்பாக இருக்கிறது..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு