புதன், 10 ஆகஸ்ட், 2011

ஆடி அமாவாசை நிகழ்வின் தொடர்ச்சி .....

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
 
 சரியாக 9  மணிக்கு சந்தன மகாலிங்கத்தை அடைந்தபோது , அங்குள்ள மக்கள் கூட்டத்தை பார்த்து மயங்கி போனேன் . எங்கள் ஊரை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட மக்கள் எம்மை வரவேற்றார்கள் . பின் தலையாட்டி சித்தர் மடத்தை சேர்ந்த அனைவர்களும் வரவேற்று அங்கு எம்மை தங்குமாறு அழைத்தார்கள் .  நானும் சரி என்று கூறிவிட்டு அங்கு அமர்ந்து விட்டு பின் மகாலிங்கத்தை தரிசனம் செய்ய புறப்பட்டேன்.  காவல் அதிகாரிகளோ ஐயா வரிசையில் வாருங்கள் என்று கூறினார்கள் . சரியான கூட்டம் வேறு , நான் கூறினேன் , ஐயா நான் சாமி  கும்பிடவரவில்லை மகாலிங்கத்திருக்கு சேவை செய்ய தான் வந்துள்ளேன் என்று கூறியதும் ,என்னை நேரடியாக தரிசனம் செய்ய அனுமதித்தார்கள் .

அங்கு சென்றதும் ,அப்போது தான் தலைவருக்கு தீப ஆராதனை ஆரம்பித்தது . நல்ல தரிசனம் கிடைத்தது . பின் வழக்கம் போல மக்கள் சேவையில் இறங்கி விட்டேன், தரிசனம் செய்ய வரும் பக்தர்களை ஒழுங்கு படுத்தி வரிசையில் அனுப்பவதை மேற்கொண்டேன், உடன் காவல் அதிகாரிகள் இருந்தாலும் ,எமது கடமையை சிரமேற்கொண்டு செய்தேன், அன்றைய மாலை தலையாட்டி சித்தர் மடத்தின் சார்பில் நடைபெற்ற யாகத்தில் கலந்து கொண்டு அதையும் சிறப்புற செய்தேன் .

இந்த வருடம் , காவல் அதிகாரிகள் 500 க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடுத்த பட்டார்கள் .
காட்டு தீ பரவியதால் ஆயிரக்கணக்கான மக்கள் தானிபாறையிலே தங்க வைக்க பட்டார்கள் , ஆகையால் தரிசனம் செய்ய வந்த மக்கள் கூட்டம் கட்டுபாட்டுகுள்ளே இருந்தது .

கோவில் சேவையில் உள்ளவர்களுக்கு எப்போதும் தனி மரியாதை அங்கு  உண்டு ,அவர்கள் தங்குவதற்கு இடமும், உணவும் தரப்படும் . இந்த வாய்ப்பு கிடைப்பதற்கும் அவன் அருள் தேவை.
அன்றைய சேவை முடிந்தவுடன் வழக்கம் போல தூங்க சென்றேன். அங்கு எம்மை போல நிறைய நண்பர்கள் இருப்பார்கள் .எல்லாரும் ஆடி அமாவாசைக்கு கண்டிப்பாக வந்து விடுவார்கள்.
ஆகையால் எங்களிடம் தூக்கம் வராது . ஏதாவது மகாலிங்கத்தின் மகிமையை பத்தி பேசி கொண்டு இருப்போம்.

வழக்கம் போல இந்த வருடமும் சித்தர்களின் தரிசனத்திருக்கு காத்திருந்தேன் . 
மகாலிங்கம் ரொம்ப புத்திசாலி . ஏனெனில் வரும் பக்தர்களுக்கு நல்ல ஆரோக்கியமான அன்னத்தை தந்து உறங்க வைத்து விடுவார். இதனை மனதில் கொண்டு நான் கொஞ்சமாக இரவு உணவினை உண்டுவிட்டு காத்திருந்தேன் .

ஆனால் வழக்கம் போல உறங்கிவிட்டேன் . அப்போது ஒரு அருமையான நிகழ்வு நடந்தது. நான்  உறங்கிக்கொண்டு இருந்த இடம் சட்டைநாதர் சித்தரின் குகைக்கு மேல். அங்கு தான் சிவா சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது . அந்த ஜீவசமாதியின் அருகே தான் நான் உறங்கி கொண்டு இருந்தேன் .

அந்த அற்புத நிகழ்வினை நாளைய பதிவில் பதிவு செய்கிறேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.

3 கருத்துகள்:

  1. சதுரகிரி என்றுமே நம்பியவர்களுக்கு நற்கதி தரும் கற்பகதருதான்...

    சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்..

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. //....அந்த அற்புத நிகழ்வினை நாளைய பதிவில் பதிவு செய்கிறேன்..//

    சித்தர்களின் அற்புதத்தை எதிர்பார்க்கின்றேன்.

    பதிலளிநீக்கு