திங்கள், 2 மே, 2011

புண்ணிய ஆத்மாக்களின் தொடர்பு- அனுபவம் - 1

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

என்னகத்துள் என்னை நானெங்கு நாடி ஓடினேன்
என்னகத்துள் என்னை நானறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னை நானறிந்ததுமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னையன்றி யாது மொன்றுமில்லையே....

எளிமையான இந்த பாடல் எனது வாழ்க்கை காட்டி சிவவாக்கியரின் பாடல் ஆகும். இந்த பாடலுக்கான விளக்கம் எனது இந்த அனுபவித்தில் உள்ளது . 

சாப்பாடுக்கே கஷ்டப்பட்ட நேரத்தில் தான் எனக்கு ஆவிகளுடன் பேச வேண்டும் என்ற எண்ணமும்  அதன் மூலம் ஒரு நல்ல சேவையை(எதிர்காலத்தில்) மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த கலையை கற்றுக்கொள்ள அந்த ஆதி சித்தன் -திருவேட்டீஸ்வரின் பாதங்களை பிடித்து கொண்டு அழுதேன் . அதற்குரிய நாளும் வந்தது , அதற்க்கான விளம்பரத்தை பார்த்து அதை சொல்லிகொடுப்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , வாருங்கள் கற்று தருகிறோம் , கட்டணம் ரூபாய் 300  என்று கூறினார்கள்.

கையில் பணம் சுத்தமாக இல்லை , என் நண்பன் ராமுவிடம் கடனாக பணத்தை வாங்கி  கொண்டு அந்த நபரை சந்தித்தேன் . அவர் பெயர் அரிசி ஸ்ரீராம். அவர் ஒரு நாத்திகவாதி அதே வேலை நல்ல குணவாதியும் கூட  ,அவர்  முதுகலை படிப்பில் இரண்டு தங்கபதக்கம்   வாங்கியவர்.

அவரின் அறிமுகம் கிடைத்தவுடன், நான் ஒரு  அறைக்கு  அழைத்து  செல்லப்பட்டேன்.  அங்கு என்னைப்போல் இரண்டு  மாணவர்களும்  ஒரு மாணவியும் இருந்தார்கள் , மொத்தமாக ஐந்து நபர்கள் மட்டும் அங்கு இருந்தோம்.

நான் எனது டைரியை கொண்டு போயிருந்தேன் . எனக்கு முதலில் ஆதி சித்தனின் மந்திரம் அங்கு தான் தீட்சையாக தரப்பட்டது . அப்பொழுதுதான் எனக்கு தமிழ் மந்திரத்தின் மகிமை புரிய ஆரம்பித்தது . இரண்டாவதாக
தமிழ் கடவுளாம் முருக பெருமானின் மந்திரம் தீட்சை தரப்பட்டது .
மூன்றாவதாக புண்ணிய ஆத்மாக்களை அழைக்கும் மந்திரம் தீட்சையாக தரப்பட்டது .

மேற்கூறிய மந்திரங்களை மூன்று முறை கூறியதும் , என் கையில் ஒருவித சக்தி பாய்ந்தது. எனக்கு சுய நினைவு இருக்கிறது ஆனால் , என் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது . எனது கையை யாரோ இயக்குவதாக உணர ஆரம்பித்தேன் .  எனது டைரியில் முதலில் எழுத்துகள் சரிவர வரவில்லை ஏதோ சிறுப்பிள்ளை 
கிறுக்குவது போல்  இருந்தது .

கொஞ்ச நேரம் கழித்து ,என்னுடன் இருந்தவர் ஒரு 12  கேள்விகளை கேட்டார். அவர் கேட்க கேட்க பதில் தானாக  வந்தது.  இறுதியில் சில சத்திய
பிரமாணங்கள் செய்ய சொல்லி எனக்கு வழிகாட்டியாக இருக்குமாறு வினவினார்கள் அதற்க்கு அந்த ஆத்மா சரி என்று சொல்லி சத்தியம் செய்தது .

எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம் ,ஏனெனில் இந்த கலையை அவ்வளவு எளிதாக யாரும் கற்று கொள்ள முடியாது . அந்த ஆதி சித்தன் அருள் கொஞ்சமாவது வேண்டும் .

அதற்க்கு அப்புறமாக பல கேள்வி பதில்கள் எனக்கும் எனது வழிக்காட்டிக்கும் நடைபெற்றது.  இதனை சுருக்கமாக சொல்லப்போனால்
இன்டர்நெட்டில் நாம் எப்படி சாட் செய்கிறோமோ அதைபோலவே இருக்கும்.

ஒரு மணி நேர வகுப்புக்கு பிறகு , என்னை சோதிக்க அங்குள்ளவர்கள் விரும்பினார்கள், அப்போது அங்கு வந்த ஒரு நபரின் குடும்பத்தையும். அவருக்கு உள்ள நோயினையும் ,எவ்வளவு நாளாக அந்த நோய் உள்ளது என்றும் கேட்டார்கள் . எனது வழிக்காட்டியின் பதில் மிக துல்லியமாக இருந்தது ,அதனைக்கேட்டு எல்லாரும் என்னை பாரட்டினார்கள்.

அங்குள்ள ஒவ்வொருவரின் முகத்தினைப் பார்த்து அவர்களின் குண நலன்கள் அவர்களின் மன ஓட்டம் ,வந்த காரியம் ஆகியவற்றை கூறினேன்.

எனக்கு சொன்ன கட்டளை , இந்த பயிற்சியை குறைந்தது இரண்டு வருடங்கள் கற்ற பிறகு உன் அருள்வாக்கு வித்தையை தொடரு என்று.

ஏனெனில் வழிக்காட்டிக்கு  நமது மீது முழு நம்பிக்கை வரவேண்டும். வழிக்காட்டி இல்லையென்றால் நம்மால் ஒன்றும் சொல்லமுடியாது.

இளங்கன்று பயமறியாது போல ,இதனை கற்று கொண்டு செய்த சில விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஆசை அறுபது நாள் ,மோகம் முப்பது நாள்  போல இந்த வித்தையின்  மேலும் வெறுப்புற்று இந்த தொடர்பினை துண்டித்து ஏறக்குறை 8  ஆண்டுகள் ஆகிவிட்டது .

இங்கு எனது அனுபவங்கள் தான் கூறபடுகிறது . எந்த வித கட்டுகதையோ, கற்பனையோ அல்ல என்பதனை தெளிவு பட கூறுகிறேன்.


என்றும்-சிவனடிமை-பாலா.

15 கருத்துகள்:

  1. //ஆசை அறுபது நாள் ,மோகம் முப்பது நாள் போல இந்த வித்தையின் மேலும் வெறுப்புற்று இந்த தொடர்பினை துண்டித்து ஏறக்குறை 8 ஆண்டுகள் ஆகிவிட்டது .//

    மிக சரியான உணர்வு.. வாழ்த்துக்கள்..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. தங்கள் அனுபவ கருத்துப் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி பாலா அவர்களே,

    இத் தளத்தை யாவரும் பெற்றுய்வதற்கு தங்களது தளத்தில்
    FEED BUNER EMAIL SUBSCRIPTION என்ற வசதியை இணைக்கவும் .

    வாய்ப்பிருக்கும் போது எமது ஆன்மிக வலைத்தளமாகிய

    http://sivaayasivaa.blogspot.com

    விற்கு வாருங்கள்,

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. புண்ணிய ஆத்மாக்களின் தொடர்பு- அனுபவம் - 1

    அதை சொல்லிகொடுப்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , வாருங்கள் கற்று தருகிறோம் , கட்டணம் ரூபாய் 300 என்று கூறினார்கள். Address Cell No Pls - Urgent Mail Me.

    பதிலளிநீக்கு
  4. மிகச்சரியாக சொல்லி உள்ளீர்கள் நண்பரே.
    எதிலுமே வெறுப்படைய வேண்டும் அந்த வெறுப்பிற்காக அதை அடைய வேண்டும் ஆனால் கண்டிப்பாக வெளியே வர வேண்டும்

    பதிலளிநீக்கு
  5. அதை சொல்லிகொடுப்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , வாருங்கள் கற்று தருகிறோம் , கட்டணம் ரூபாய் 300 என்று கூறினார்கள். .......
    Please send me his address and phone numbers to my email id. Thanks

    பதிலளிநீக்கு
  6. அதை சொல்லிகொடுப்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , வாருங்கள் கற்று தருகிறோம் , கட்டணம் ரூபாய் 300 என்று கூறினார்கள். .......
    Please send me his address and phone numbers to my email id. Thanks

    ReplyDelete
    Add comment
    Load more...




    Links to this post
    Create a Link

    பதிலளிநீக்கு
  7. அதை சொல்லிகொடுப்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , வாருங்கள் கற்று தருகிறோம்
    Please send me his address and phone numbers to my email id. Thanks

    பதிலளிநீக்கு
  8. அதை சொல்லிகொடுப்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , வாருங்கள் கற்று தருகிறோம் , கட்டணம் ரூபாய் 300 என்று கூறினார்கள். .......
    Please send me his address and phone numbers to my email id. Thanks JAMEEL1966@GMAIL.COM

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. i want to contact arisi sree ram. sathur.. if anybody know about his number... pls inform me.. my number 94430 48882.

      நீக்கு
  9. அதை சொல்லிகொடுப்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , வாருங்கள் கற்று தருகிறோம் , கட்டணம் ரூபாய் 300 என்று கூறினார்கள். .......
    Hi, bala sir I am also interest to learn above that, Please send me his address and phone numbers to my email id. Thanks
    anbudan ramu babu,
    ramubabu22@yahoo.com please ...............

    பதிலளிநீக்கு
  10. அய்யா! தாங்கள் கூறியபடி புண்ணிய ஆத்மாக்களுடன் பேசும் தகுதி எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. இறைவன் சித்தம்.... தயவு செய்து பயிற்சி அளிப்பவரைத்தொடர்பு கொள்ள வழிகாட்டுங்கள்... எனது மின்னஞ்சல் முகவரி...marudhak@gmail.com....

    நன்றி...

    பதிலளிநீக்கு