புதன், 8 ஜூன், 2011

பட்டினத்து அடிகளின் பூரணமாலை 31 -> 40

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,

பூரணமாலை தொடர்ச்சி ....
31 ) கருவாய் உருவாய்க் கலந்து உலகெல்லாம் நீயாய்
         அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே !.

விளக்கம்  : நாம் எவ்வாறு உருவானோம் என்று உணரபெற்றாலே இந்த பாடலுக்கான விளக்கம் புரியும்.  பெற்றோர்களின் உறவினால் அவர்களுக்கு தெரியாமல் அருவமாகி பின் உருவமாகி பின் தான் நாம் இவ்வுலகில் பிறக்கிறோம்.   நம் உடலில் இருந்து வெளியாகும் கோடிகணக்கான சுக்கிலத்தில் இருந்து ஒரே ஒரு அணு மட்டும் சென்று ஒரு அழகிய உயிரை உருவாக்க கருவாக அமைகிறது.  இதனையே தான் சித்தர்களும் ,ஞானிகளும் இறைவனை உருவமாக வழிபடுவதை விட அருவமாகவே அதிகம் வழிப்பட்டதாக காண்கிறோம்.  இறைவன் எல்லா உயிர்களிலும் மறைமுகமாகவே உள்ளான் என்பதை அறியாமல் போனேனே என்று புலம்புகிறார். இதனையே தான் கொல்லா நோன்பு இருக்கவேண்டும் என்று இராமலிங்க அடிகளார் கூறுகிறார். எல்லாவுயிர்களையும் தம்முயிர்களை போல என்ன வேண்டும்.

32 ) செம்பொன் கமலத் திருவடியைப்  போற்றாமல்
        பம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே !

விளக்கம் : இறைவனின் திருவடியை  போற்றி வணங்கவேண்டும் .

33 ) எனக்குள்ளே நீ இருக்க  உனக்குள்ளே நான் இருக்க
        மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே !

விளக்கம் : மனக்கவலை தீர வேண்டும். ஏனெனில் இறைவன் வாழும் இந்த உடல் அமைதியாக இருக்க வேண்டும்.  மருந்தினால் குணப்படுத்த முடியாத ஒரே நோய் மன நோய் தான்.  நம் உடம்பினுள்ளே இறைவன் இருக்கும்போது நாம் ஏன் கவலை கொள்ளவேண்டும்.  நடப்பது கண்டிப்பாக நடந்தே தீரும் அதில் எந்த வித மாற்றம் இல்லை. அப்படி இருக்க என்ன தான் நடக்கும் என்று பார்க்க நினைத்தாலே நம்மை சுற்றி எந்த நோயும் , பிரச்சனையும் அணுகாது.

 
34 ) எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடினதை
        பழுதறவே பாராமல் பயன் இழந்தேன் பூரணமே !

விளக்கம் : நாம் வாழும் இந்த தேகத்தை ஏழு வகையாக பிரிக்கிறார்கள். இதனைப்பற்றி இராமலிங்க அடிகளார் அருமையாக பாடி உள்ளார் . அதனையே ஏழு வண்ணங்கள் ஆகவும் பிரிக்கிறார்.  அந்த நிகழ்ச்சி தான் ஒவ்வொரு வருடம் தைப்பூசம் அன்று நடைபெறுவதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.

கறுப்புத்திரை -மாயசக்தி
நீலத்திரை -கிரியா சக்தி
பச்சைத்திரை -பராசக்தி
சிவப்புத்திரை - இக்சா சக்தி
பொன்மைத்திரை - ஞான சக்தி
வெண்மைத்திரை - ஆதி சக்தி
கலப்புத்திரை - சிற் சக்தி

இதற்க்கான ஒரு நீண்ட விளக்கத்தை வரும் பதிவுகளில் காணலாம்.

35 ) சாதி பேதங்கள் தனை அறிய மாட்டாமல்
        வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே !
 
விளக்கம் : எல்லா சித்தர்களும் சாதி பேதங்களை முற்றிலும் வெறுத்தவர்கள் ஆவார்கள்.  இதனையே குதம்பை சித்தர் பின்வருமாறு கூறுவார்.

"ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி
  வீண்சாதி மற்றவெல்லாம்  குதம்பாய்
  வீண்சாதி மற்றவெல்லாம் "

"சாதி வேறு என்றே தரம் பிரிப்போருக்கு
 சோதி வேறாகுமடி குதம்பாய் "
 சோதி வேறாகுமடி "


 
36 ) குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான்
        மலப்பாண்டத்  துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே !

விளக்கம் : இறைவன் நம்மை படைக்கும்போது ஒரு உயிராக தான் படைக்கிறான் .ஆனால்  நாமோ சாதி வெறி பிடித்து நம்மையே நாம் அழித்து கொள்கிறோம்.

இதனை குதம்பை சித்தர் பின்வருமாறு  கூறுகிறார்.
"ஆதி பரப்பிரமம் ஆக்கும் மக்காலையில்
 சாதிகள் இல்லையடி குதம்பாய்
 சாதிகள் இல்லையடி "

"பார்ப்பாரைக் கர்த்தர் பறையறைப் போலவே
 தீர்ப்பைப் படைத்தாரடி குதம்பாய்
 தீர்ப்பைப் படைத்தாரடி "

37 ) அண்டபிண்ட  எல்லாம் அணுவுக்கு அணுவாய் நீ
        கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே !

விளக்கம் : இறைவன் கொண்ட வடிவினை பற்றி குறிப்பு அறியாததை பற்றி கூறுதல் .
38 ) சகத்திரத்தின் மேல் இருக்கும் சற்குருவைப் போற்றாமல்
        அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே !

விளக்கம் : சற்குருவை போற்றுதல் .
39 ) ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்
        நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே !

விளக்கம் : மெய், வாய், கண் , காது ,மூக்கு ஆகிய ஐம்பொறிகளை அடக்கி உன்னை வணங்கவில்லையே  என்று நெஞ்சம் நடுங்கி புலம்புகிறார்.
40 ) என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய்
        உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே !

விளக்கம் : விதி எனும் வழியில் நடக்கும் அனைத்தும் உந்தன் திருவிளையாட்டே என்று
     உணரமால் இறைவனை நொந்து கொள்ளுதல் .
தொடரும்...
என்றும்-சிவனடிமை-பாலா.

3 கருத்துகள்:

  1. மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
    மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
    தங்கத்தை எண்ணி பங்கம் போதாதே – தங்க இடம் பாரப்பா….
    இதுவே சித்தர்களின் கொள்கை.
    நலம் சிறக்க , நல்லன விளைக.

    பதிலளிநீக்கு
  2. மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
    மாலாட நூலாட மறையாட திறையாட
    மறைதந்த பிரம்மனாட,
    கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
    குஞ்சர முகத்தனாட,
    குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
    குழந்தை முருகேசனாட,
    ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு
    முனியட்ட பாலகருமாட,
    நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
    நாட்டியப் பெண்களாட,
    வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை
    விருதோடு ஆடிவருவாய்
    ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
    தில்லைவாழ் நடராசனே.

    பதிலளிநீக்கு
  3. அருமையான விளக்கங்கள். தொடருங்கள்.

    வாழ்த்துக்கள்

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு