சனி, 26 பிப்ரவரி, 2011

பொய் தவசிப்பற்றி காகபுசண்டர் கூறும் கருத்துகள் ,


சித்தர்கள் பொதுவாக பொய் வேடமிட்டு திரியும் மாக்களை நன்றாக வசை 
பாடுவார்கள் .இந்த உலகில் உயிர் வாழ வேண்டும் அதற்க்கு அன்னம் வேண்டும்.அன்னத்திற்கு வேண்டி ஒருவன் தவசியானால் அவன் நிலையைப்பற்றி.

எனக்கு பிடித்த பாடலில் ஒன்று..

பாடல்:

சோருக்கோ அருசுவைக்கோ துணிக்கித் தானோ 
   சுகம்வேண்டி யிவ்வளவுங் கையையேந்தி
நீருக்கோ ஓடேந்தி  வாசல்நின்று 
   நிமிர்ந்தாக்கால் நீரிடார் தலைகவிழ்ந்தே 

பாருக்கோ பாதமதைப்  பார்த்தேநின்று 
   பரிவாசி காணாமற் கூசிநின்று
மோருக்கோ நின்றிரு ப்பீர்  வாசல்தோறும் 
  மொய்குழலா ரிட்டஅன்னம்  வீடுதானே ....

விளக்கம் :
பொதுவாக பிச்சை எடுப்பது சாதாரண விஷயம் இல்லை . பலரின் ஏச்சுகலுக்கு இடையில் தான் வாழ முடியும். இப்படி  பட்ட வாழ்க்கை நமக்கு தேவையா ?
தேவை என்றால் அதை அனுபவித்து வாழ வேண்டும். 
எல்லா சித்தர்களும் திருமணம் புரிந்து கொண்டு இல்லறத்தில் இருந்து கொண்டு துறவறத்தை மேற்கொண்டவர்கள் . எமது குரு முனியும் கூட தான்.
யாரும் இதற்க்கு விதி விளக்கல்ல .

பிச்சை எடுத்தவர்களில் பல சித்தர்களுண்டு ஏன் அந்த ஆதி சித்தனும் உண்டு.

அன்னமய கோசத்திற்கு தான் அன்னம் தேவை ஆனந்தமய கோசத்திற்கு இல்லை .  மேற்கண்ட பாடல் அருமையான விளக்கத்தோடு உள்ளது 
பிச்சை எடுப்பதும் அதில் கிடைத்தால் சந்தோசம் இல்லையென்றால் தலை கவிழ்ந்து அசிங்கம் ஏற்படும் போன்ற கருத்துகள் உள்ளது.

வாசியைப்பார்த்து வந்தால் அன்னம் தேவை இல்லை ,ஆனந்தம் அங்கு தாண்டவமாடும் . உயிருக்கும் உடலுக்கும் தேவையான அனைத்து சத்துகளும் வாசியின் மூலம் பெறமுடியும்.

"வாசியை கவனித்தால் காசி போக தேவையில்லை"

வாசியை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் குருவருளால்.


என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

4 கருத்துகள்:

  1. வாசி யோகம் எங்கு பயிற்ருவிக்கப் படுகிறது ?

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள ஜெகதீஷ் ,
    அருமையான கேள்வி, எல்லோரும் இதைதான் கேள்வி கேட்கிறார்கள்.
    நல்ல குருவின் அருள் கிடைக்க சித்தர்களிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
    அவர்களே உங்களுக்கு வழிவகை செய்வார்கள்.

    காகபுசன்டரின் பெருநூல் காவியம் -என்ற நூலில் வெகு தெளிவாக ,எளிமையாக கூறப்பட்டுள்ளது . சித்தர்களின் அனைத்து பாடலிலும் அதைப்பற்றி காணலாம்.
    தற்சமயம் யாம் அறிந்த வலைத்தளம் .

    http://www.kagapujandar.com/

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  3. I believe, Shree Vilvam Yoga Centre is the best place to learn Vaasi Yoga from Sivasithan. Visit www.ngobikannna.com

    பதிலளிநீக்கு
  4. Dear Anonymous,

    Vaasi yogam is not a business, once you are ready then in that stage guru always come there and take you,Thanks for coming .

    பதிலளிநீக்கு