திங்கள், 28 மார்ச், 2011

சதுரகிரியின் சந்தன மகிமை அனுபவம்-2 முடிவு.

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

சிவவாக்கியரின் பாடலில் இருந்து இந்த பதிவை ஆரம்பிக்கறேன்...

சிவாயம் என்ற அக்ஷரஞ் சிவனிருக்கும்  அக்ஷரம்
உபாயமென்று நம்புவதற்கு உண்மையான அக்ஷரம்
கபாடம் அற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம்இட் டழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே

நேற்றைய தொடர்ச்சி ,

 என் சித்தி மற்றும் சித்தப்பாவை பார்த்துவிட்டு ,
கொஞ்சம் பொறுங்கள் என கூறிவிட்டு , மனதில் சதுரகிரியாரை நினைத்துகொண்டு கொஞ்சம் சந்தனமும் ,விபூதியும் அவர்களுக்கு கொடுத்துவிட்டு ,சித்தி மனதில் மகாலிங்கத்தை நினைத்துகொண்டு இந்த சந்தனத்தை சாப்பிடுங்கள் கூடியவிரைவில் உங்கள் நோய் குணமாகும்.
வரும் வெள்ளிகிழமைக்குள் எல்லாம் நல்லபடியாக அமையும் என்று கூறி அவர்களிடம் பிரசாதத்தை கொடுத்தேன்.

உங்கள் குலதெய்வம் அருகில் உள்ளதுதானே என்று கேட்டேன் ,அதற்கு ஆமாம் அருகில் உள்ள அரியலூரில் தான் உள்ளது என்று கூறினார்கள் , மேலும் குலதெய்வத்தை வழிப்பட்டு ஏறக்குறைய ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டது என்று கூறினார்கள்.  நான் உடனே அவர்களைப்பார்த்து , நேராக
உங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று அவர்களிடம் மனமார மன்னிப்பு வேண்டிக்கொண்டு ,எங்களையும் எங்கள் குலத்தினயும் காத்தருளும் வருடாந்தோரும் நாங்கள் மறக்காமல் உங்களை வந்து பார்த்து முறைபடி வணங்குகிறோம் என்று வேண்டிக்கொண்டு ஒரு தீபத்தினை மற்றும் ஏற்றுங்கள் என்று கூறினேன். அவர்களும் அவ்வாறே செய்தார்கள் .

அடுத்த வார  வெள்ளிகிழமை என் சித்தியிடமிருந்து  எனக்கு  போன் வந்தது .
தம்பி அந்த மகாலிங்கம் தான் உன்னை எங்களுக்கு அனுபி வைத்தார் என்று கூறிவிட்டு என் சித்தி அழுதார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்ன சித்தி ஆயிற்று என்று கேட்டேன் ,

அதற்க்கு மருத்துவர் அறுவை சிகிச்சை தேவையில்லை என்று கூறிவிட்டு இது எப்படி சாத்தியமாயிற்று என்று குழம்ப ஆரம்பித்துவிட்டார் . ஏனெனில்
ஒரு வாரத்திருக்கு முன்னால் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட் படி ,அறுவை சிகிச்சை மற்றுமே வழி என்று கூறியவர், வெள்ளிகிழமை அன்று  செக்குப் செய்த போது எல்லா  ஸ்கேன் ரிப்போர்ட்களும்  நன்றாகவே வந்துள்ளது .
அவர் நிச்சயமாக குழம்பிவிட்டார் . இருப்பினும் என் சித்தப்பா மருத்துவரிடம்
நீங்கள் அறுவை சிகிச்சை பண்ணிவிடுங்கள் என்று கூறியதும் ,டாக்டரோ ஒரே  டென்ஷன் ஆகிட்டார் ,நானோ குழப்பத்தில் இருக்கேன் ,அதில் நீ வேர என்று கூறிவிட்டு, உன் மனைவி நல்ல இருக்கா எந்த ஒரு அறுவை சிகிச்சையும் தேவையில்லை என்று கூறிவிட்டார்.

என் சித்தி உடனே ,பாலா இந்த வாரமே நான் சதுரகிரி யாத்திரை போகிறேன் என்று கூறிவிட்டு அவ்வாறே சென்றும் வந்தார்கள்.

குலதெய்வ வழிப்பாடினால் சொத்து பிரச்சனையும் , சந்தன மகிமையால் நோய் பிரச்சனையும் தீர்ந்து நன்றாக வாழ்ந்து  கொண்டிருக்கிறார்கள்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

1 கருத்து:

  1. குல தெய்வ வழிபாட்டால் தீராத குறைகளே இல்லை என்று சொல்லலாம். அனைவரும் குல தெய்வ வழிபாட்டை தவறாமல் செய்யவும்.

    எல்லாம் சிவன் செயல். எந்த ஒரு பிரச்சனையையும் அவன் மேல் போட்டுவிட்டால் அவன் அதற்கு முடிவு கட்டிவிடுவான்.

    திருச்சிற்றம்பலம்
    சிவனருள் பதிவன்.,

    பதிலளிநீக்கு