புதன், 30 மார்ச், 2011

அகத்தியர் ஞானம்‍ 9ல் 2

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,
அகத்தியர் ஞானம்‍ 9ல் 2

மோட்சம் பெறுவதற்குச் சூட்சஞ் சொன்னேன்
  மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே
காய்ச்ச‌லுட‌ன் கோப‌த்தைத் த‌ள்ளிபோடு
  காசினியிற் புண்ணிய‌த்தைக் க‌ருதிக்கொள்ளு
பாய்ச்ச‌லது பாயாதே பாழ் போகாதே
  பலவேத சாஸ்திரமும் பாரு பாரு
ஏச்சலில்லா தவர் பிழைக்கச் செய்த மார்க்கம்
  என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே..

விளக்கம்:
 நேற்றைய பாடலில் மோட்சம் பெறுவதற்க்கு வழிமுறையை  சொன்ன குரு நாதர் , அதனுடன்
பொய் ,களவு,கோபம் போன்றவற்றை விலக்கவேண்டும் என கூறுகிறார்.
இந்த பூமியில் புண்ணியத்தை தேடிக்கொள்ள வழிமுறையை கண்டுகொள் எனவும்,
தேவையற்ற‌ வழியில் வாழ்வினை செலுத்தி பாழ்போகாதே என கூறுகிறார்.மற்றும்
பலவித வேத நூல்களை படித்துப்பார் எனவும், இவ்வகையான நூல்களை எழுதியவர்களை
தங்களுக்கு ஏற்ப் தாமே அவர்களே ஏற்படுத்திக்கொண்ட மார்க்கம் எனவும்,
என் மக்களே இதனை எண்ணிப்பாருங்கள் என்று கூறுகிறார்.

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

1 கருத்து: